அவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பச்சைக் குழல்விளக்கு ஒன்றின் முன் காரை நிறுத்தினேன். சட்டத்தால் ஏற்படுத்தியிருக்க முடியாத தரப்படுத்தலை நடைமுறை வசதி ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்துச் சாலைகளில் பச்சைக் குழல்விளக்குகளைக் கண்டால் இரவு உணவுக்கு அங்கே நிறுத்தலாம்.
தமிழனின் வழக்கமான இரவு உணவான புரோட்டா இரண்டு சொல்லி அமர்ந்தேன். சில நிமிடங்களில் சூடான அடுக்கடுக்காகப் பிரியும் புரோட்டா வாழை இலையில் பரிமாற்றம். தொட்டுக்கொள்ள தேங்காய்ச்சட்டினியும், காரச்சட்டினியும், கெட்டியான காய்கறிக் குருமாவும்.
சாப்பிட்டுக்கொண்டே நோட்டமிட்டதில் அடுப்பு அமைக்கப்பிருந்த ஒழுங்கு தெரிந்தது. புகை கொஞ்சமும் வெளிவராமல் குழாய்மூலம் மேலெழும்பி வெளியேறுமாறு செய்யப்பட்டு, தென்னை மட்டைகள் எரிந்துகொண்டிருந்தன. டிவி ஓடிக்கொண்டிருக்க சிறுவர் இருவர் விளையாடிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தனர். கடையில் என்னைத் தவிர இன்னொருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு சுடப்பட்ட தோசை ஏற்படுத்திய ஓசை காதுக்கு இனிக்கவே எனக்குப் பிடித்த ஆப் பாயில் ஒன்று கேட்டேன். சந்தோசமாக சரியான பதத்தில் கொண்டுவரப்பட்டது.
தேவகோட்டைப் பக்கம் சொந்த ஊராம். கோவைப் பக்கம் வந்து பதினெட்டு ஆண்டாச்சாம். வேறு கடையில் வேலைக்கு இருந்துவிட்டு இந்தக் கடை தொடங்கி ஒரு ஆண்டு ஆச்சாம். இருபத்துநாலு மணி நேரமும் புரோட்டா கிடைக்குமாம். வாகனப் போக்குவரத்தை எதிர்பார்த்து நடப்பதால் கூட்டம் விட்டுவிட்டு சேருமாம்.சாப்பிட்டுக்கொண்டே ‘புரோட்டா நல்லாருக்கு’ என்றேன். அவர் முகத்தில் ஒரு மின்னல்.
போதும்போல இருந்தாலும் ஒரு தோசை சாப்பிடுவமே என்றும் தோன்றியது. ‘பெரிசா மொறுமொறுன்னு எண்ணையா வேண்டாம், அளவா ஒரு தோசை கிடைக்குமா?’ ‘ஓ... வீட்டுத் தோசை மாதிரி போட்டுத் தரட்டுங்களா?’’ம்.’வழக்கமான கிண்ணத்தை கொண்டு தேய்க்காமல் கரண்டிகொண்டு பரப்பி, மூடிவேகவைத்து பக்குவமாகக் கொடுத்தது அசல் வீட்டுத் தோசை மாதிரியே இருந்தது. இதற்கு கெட்டிச்சட்டினியும், மணக்கும் முருங்கைக்காய் சாம்பாரும். விட்டிருந்தால் இன்னும் ரெண்டு தோசை சாப்பிட்டிருப்பேன். தொப்பையைக் குறைக்க காலையில் வெக்குவெக்குனு நடப்பதில் பயனில்லாமல் போய்விடும் என்பதால் அத்துடன் எழுந்து இலையை பாத்திரத்தில் போட்டுவிட்டு கையைக்கழுவினேன்.
’எவ்வளவாச்சு?’
’பதினெட்டுரூபா சார்’
எடுத்த ஐம்பது ரூபாயை வைத்துக்கொண்டு, இரு பத்துரூபாய்த் தாள்களைக் கொடுத்து, மீதிவேண்டாம், வெச்சுக்கங்க’ என்று சொல்லி நடையைக்கட்டினேன். இன்னும்கூட ரொம்பக் குறைவாய்க் கொடுத்த மாதிரி குற்ற உணர்வு.
இன்று 300 ரூபாய்-400ரூபாய் சம்பாதிக்கிறார்கள் கொத்தனார்கள். 100ரூபாய்க்குக்கீழ் எந்த வேலைக்கும் ஆள்கிடைப்பதில்லை. ஆனாலும் ஒருவேளை உணவு இருபதுரூபாய்க்குள் சாப்பிட முடிகிறது ஆச்சர்யமாகத் தானிருக்கிறது.
இங்கே பட்டினிமூலம் இனி ஒரு சாவு வராது. விவசாயிகள் தூக்குப் போட்டுக்கொள்வதும் இங்கேயில்லை. வாழ்க தமிழகம்!
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, செப்டம்பர் 26, 2009
வியாழன், அக்டோபர் 09, 2008
மொக்கை+கும்மி @ நீலகிரி எக்ஸ்பிரஸ் - 7 அக்.2008
சென்னை-கோவை. வழக்கம் போலவே கையிலிருந்த வாழைப் பழங்களை உள்ளே தள்ளிவிட்டுக்கொண்டு உசாராக பெட்டியின் வெளிப்புறம் ஒட்டப்பட்டிருக்கும் அட்டவணையில் பேர் இருக்கிறதாவென சரிபார்த்துக்கொள்கிறேன். அதிசயமாக 72-ல் ஒரு முப்பதாவது காலியாக இருக்கிறது. 'ஒருவேளை ஆர். ஏ. சி.க்காரங்களுக்குக் கொடுத்திருப்பாங்க' என்று நினைத்தால், ஊர்போகும்வரை காலியாகவே வந்தது இன்னமும் ஏன் என்று புரியவில்லை.
அரக்கோணம் வரை உரிமையுடன் ஏறிக்கொள்ளும் ரயில்வே பணியாளர்கள் சிலரை அங்கே இறக்கிவிட்டுவிட்டதும், விசிலெல்லாம் ஊதினார் உடன் பயணம் செய்த ரயில்வே போலீஸ் காவலர். ஒரு முறைக்கு இரு முறை கதவுகள் பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டு ஏகத்துக்கும் படம் காட்டினார்.
இரவு ஒரு மணி இருக்கும், தடதடவென்ற சத்தம். விழித்துப் பார்த்தால், ஒரு ஆளைப் போட்டு அதே காவலர் கும்முகும்மு என்று கும்மிக்கொண்டிருந்தார்.
'ஏண்டா, டாய்லெட்டுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிட்டா புடிக்க முடியாதுன்னு நினைச்சியா? படவா.'
மொக்கை அடி. ஆள் அசரவேயில்லை.
'ஆறு பொட்டிதாண்டி ஓடி போக்குக் காமிக்கறயா, ராஸ்கோல்'.
இரண்டு வார்த்தைக்கு ஒரு அடி, நான்கு அடிக்கு ஒரு உதை, என்ற சீரான வேகத்தில் கர/பாத சேவை.
'டிக்கட் எங்கடா?'
கொடுத்தார்.
'ஜெனரல் டிக்கட்டு வாங்கிட்டு இங்க எப்படிடா ஏறுன நாயே?'
'சார், சீட்டுக் காலியா...'
'காலிப்பயலே, ஏண்டா ஒவ்வொரு சீட்டுக்கடியிலும் குமிஞ்சு குமிஞ்சு என்னடா அப்படித் தேடின, பொறகு என்னைக் கண்டதும் ஏண்டா ஓடின?'
'சார்...'
கிடுக்கிப்பிடியில் அவனைப் பிடித்து வைத்திருந்தவர், செல்பேசியில், 'சேலம் ஆர்பிஎப்பா, ஒர்த்தன் தண்ணியடிச்சுட்டு ரகளை பண்றான். ரெண்டு ஆளுங்களை எஸ்10 பொட்டிக்கு வர ஏற்பாடுபண்ணுங்க...'
தடதடதட சத்தமும் வெளிப்புறக் காட்சிகளும் சேலம் நெருங்குவதை உணர்த்தின. பிறகு 25 வாரமா பயணம் பண்ணி இதுகூடத்தெரியலைன்னா எப்படி?
'செல்போனை எடுரா'.
கொடுத்தான். (இனி எதுக்கு மரியாதை அதான் ஆளுவிவரம் தெரிஞ்சபோச்சே).
பட்டன்களை அமுத்தியவர், 'க்காளி, 1 மணிக்கு யாருக்குடா போன் பண்ணினே. இதே இருக்கு பாரு நம்பரு, அவனும் சேர்ந்து உள்ற போயிடுவான். சொல்லிடு'.
'நான் பண்ணவேயில்ல சார்'.
அத்தனை அடியையும் வாங்கின மாதிரி ஒரு அடையாளமும் இல்லை. மூத்திரச் சந்துக்கு சரியான டிக்கட்டாயிருப்பான் போலிருக்கு! கைப்புள்ள கெட்டார் போங்க.
'லேப்டாப், சூட்கேஸ் கிடைக்குதான்னு தேடிட்டுத்தானே இருந்தே?'
'...'
'...'
'...'
புரண்டு படுக்கிறேன். சேலத்தில் இறக்கி என்ன பண்ணாங்கன்னு தெரியலை.
அரக்கோணம் வரை உரிமையுடன் ஏறிக்கொள்ளும் ரயில்வே பணியாளர்கள் சிலரை அங்கே இறக்கிவிட்டுவிட்டதும், விசிலெல்லாம் ஊதினார் உடன் பயணம் செய்த ரயில்வே போலீஸ் காவலர். ஒரு முறைக்கு இரு முறை கதவுகள் பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டு ஏகத்துக்கும் படம் காட்டினார்.
இரவு ஒரு மணி இருக்கும், தடதடவென்ற சத்தம். விழித்துப் பார்த்தால், ஒரு ஆளைப் போட்டு அதே காவலர் கும்முகும்மு என்று கும்மிக்கொண்டிருந்தார்.
'ஏண்டா, டாய்லெட்டுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிட்டா புடிக்க முடியாதுன்னு நினைச்சியா? படவா.'
மொக்கை அடி. ஆள் அசரவேயில்லை.
'ஆறு பொட்டிதாண்டி ஓடி போக்குக் காமிக்கறயா, ராஸ்கோல்'.
இரண்டு வார்த்தைக்கு ஒரு அடி, நான்கு அடிக்கு ஒரு உதை, என்ற சீரான வேகத்தில் கர/பாத சேவை.
'டிக்கட் எங்கடா?'
கொடுத்தார்.
'ஜெனரல் டிக்கட்டு வாங்கிட்டு இங்க எப்படிடா ஏறுன நாயே?'
'சார், சீட்டுக் காலியா...'
'காலிப்பயலே, ஏண்டா ஒவ்வொரு சீட்டுக்கடியிலும் குமிஞ்சு குமிஞ்சு என்னடா அப்படித் தேடின, பொறகு என்னைக் கண்டதும் ஏண்டா ஓடின?'
'சார்...'
கிடுக்கிப்பிடியில் அவனைப் பிடித்து வைத்திருந்தவர், செல்பேசியில், 'சேலம் ஆர்பிஎப்பா, ஒர்த்தன் தண்ணியடிச்சுட்டு ரகளை பண்றான். ரெண்டு ஆளுங்களை எஸ்10 பொட்டிக்கு வர ஏற்பாடுபண்ணுங்க...'
தடதடதட சத்தமும் வெளிப்புறக் காட்சிகளும் சேலம் நெருங்குவதை உணர்த்தின. பிறகு 25 வாரமா பயணம் பண்ணி இதுகூடத்தெரியலைன்னா எப்படி?
'செல்போனை எடுரா'.
கொடுத்தான். (இனி எதுக்கு மரியாதை அதான் ஆளுவிவரம் தெரிஞ்சபோச்சே).
பட்டன்களை அமுத்தியவர், 'க்காளி, 1 மணிக்கு யாருக்குடா போன் பண்ணினே. இதே இருக்கு பாரு நம்பரு, அவனும் சேர்ந்து உள்ற போயிடுவான். சொல்லிடு'.
'நான் பண்ணவேயில்ல சார்'.
அத்தனை அடியையும் வாங்கின மாதிரி ஒரு அடையாளமும் இல்லை. மூத்திரச் சந்துக்கு சரியான டிக்கட்டாயிருப்பான் போலிருக்கு! கைப்புள்ள கெட்டார் போங்க.
'லேப்டாப், சூட்கேஸ் கிடைக்குதான்னு தேடிட்டுத்தானே இருந்தே?'
'...'
'...'
'...'
புரண்டு படுக்கிறேன். சேலத்தில் இறக்கி என்ன பண்ணாங்கன்னு தெரியலை.
செவ்வாய், செப்டம்பர் 23, 2008
நந்தனம் சிக்னல்
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என் ஹோண்டா ஷைன் சிக்னலுக்கு அருகில் வரவர பச்சைமாறி மஞ்சள் விழுகிறது. 'ஒரே அமுத்து'. அப்பாடா!
பிறகு வேகம் குறைத்து மெதுவாக அண்ணா சாலையின் அகலத்தை ரசித்தவாறு சைதாப்பேட்டை நோக்கி சவாரி. வலதுபுறமாக ஒரு போலீஸ் மாமா. 'ஒதுங்கு' என்ற சைகை. குழப்பத்தில் முதலில் புரியாவிட்டாலும், பிறகு புரிந்து ஒதுக்குகிறேன். முன்னால் போன மாமா எனக்கு முன்னால் ஒதுங்கி அவரருகே வர சைகை கொடுக்க, வண்டியிலேயே நகர்ந்து செல்கிறேன்.
'எந்த ஊரு?'
'கோயம்த்தூரு'. அதான் டி.என். முப்பத்தெட்டு சொல்லுதே, பிறகென்ன கேள்வி.
'சிக்னல்ல என்ன லைட் இருந்துச்சு நீங்க பாஸ் பண்ணும்போது?'
'பச்சை'. ஒரே அடி!
'இல்லை, ரெட்'
'இல்லை, பச்சைதான்'
'கேமராவில் எல்லாம் ரெகார்ட் ஆகியிருக்கு, ரெட்தான்'
'ம்ஹும்'
'உங்க ஊர்ல இப்படிப் போலாமா இருக்கும், இங்கல்லாம் ரெட்னா நிக்கணும்'
'எல்லா ஊர்லயும்தான். ஆனா ரெட் இல்லை, மஞ்சள் விழுந்துது. ஆனா வந்த வேகத்தில் எப்படி நிறுத்தமுடியும்?'
'அதெல்லாம் நான் சொல்லலை. கேமராவில் இருக்கு, என்னோட வர்றீங்களா, காட்டறேன்.'
சார்லீ கம்ப்யூட்டரக் காட்டி மிரட்டினார், இந்தாளு கேமராவைப் பத்திச் சொல்லி பூச்சாண்டியா? 'சென்னை சாலைப்போக்குவரத்து அனுபவங்கள்' எழுத வெச்சிருவார் போல இருக்கே! அட அதுக்கெல்லாம் நேரமில்லை, எழுதினாலும் யாருக்கும் படிக்க பொறுமையிருக்காதுய்யா. கொஞ்சம் பொறுமையிழக்க ஆரம்பிக்கிறேன். ஆள் பார்க்க ஏற்கனவே கட்டிங் அடித்த அல்லது அடிக்கப் போகிற சாயலில், வேலை முடிந்து நங்கநல்லூரோ, மடிப்பாக்கமோ, வீட்டுக்குப் போகிற சாவகாச மூடில் 'வெளியூர் வண்டி, கிடைக்கிறது லாபம்'னு கணக்குப் போட்டு ஒதுக்கற மாதிரி தெரியுது.
வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்துகிறேன்.
'வாங்க போகலாம்'
மாமா வண்டியில் ஏறப் போகிறேன்.
'அங்க வந்து ப்ரூவ் ஆகிருச்சுன்னா டபுள் பைன் தெரியுமல்ல?'
'ஓ'
'ஆமா, சொன்னா ஒத்துக்குங்க'
'இல்ல, நான் ஒத்துக்கல, வாங்க பாத்திருவம்'
'வாங்க...'
'திரும்ப இதே இடத்தில கொண்டுவந்துவிடுவீங்கல்ல' மாமா வண்டியில் ஏற எத்தனிக்கிறேன்.
'ஆமா. சரீ, அப்படியே லைசன்ஸ், ஆர்,சி. இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்துக் காட்டுங்க'
'இந்தாங்க'
ஏய்யா, ஒரு டம்ளர் டீகுடிக்கப்போனாலே, நாலுமுறை பாக்கெட்டைத் தடவிப் பாத்துக்கற ஆளுகிட்ட, பேப்பர்சா கேக்கிற?
'கேமராவெல்லாம் எதுக்கு, இங்கயே ஓட்டை'
'என்ன ஓட்டை'
'பாருங்க, இன்சூரன்ஸ் எக்ஸ்பயர் ஆயிடுச்சு'
'அலோ, அதை விடுங்க, இன்னொரு காயிதம் இருக்கு பாருங்க, அதைப் படிங்க.'
மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் சாளேசரக் கண்ணாடியில்லாமல் இன்சூரன்ஸ்காரன் எழுத்து எனக்குப் படிக்கமுடியவில்லை.
'ம்..சரியாத்தான் இருக்கு..'
'எல்லாம் சரியாத்தான் இருக்கும். சரி, வாங்க, கேமராவைக் காட்டுங்க'
'சரி, சரி, போகட்டும், இனிமேலாவது பாத்து ஒட்டூங்க'
'சேரி. இனி ஒருதடவைக்கு ரெண்டுதடவை பாத்து ஓட்டுறேன்'
ஒண்ணும் தேறலை. போய்விட்டார்.
ப்ளாட்பாரத்தில் ஒரு ஆள்: 'சார் நீங்க விடாம பேசினதால விட்டுட்டான் சார், இல்லாட்டி, காசு வாங்காம விடமாட்டான் சார்.'
என்னமோ சாதிச்ச மாதிரி ஜம்பமா கிளம்புறேன். இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்.
பிறகு வேகம் குறைத்து மெதுவாக அண்ணா சாலையின் அகலத்தை ரசித்தவாறு சைதாப்பேட்டை நோக்கி சவாரி. வலதுபுறமாக ஒரு போலீஸ் மாமா. 'ஒதுங்கு' என்ற சைகை. குழப்பத்தில் முதலில் புரியாவிட்டாலும், பிறகு புரிந்து ஒதுக்குகிறேன். முன்னால் போன மாமா எனக்கு முன்னால் ஒதுங்கி அவரருகே வர சைகை கொடுக்க, வண்டியிலேயே நகர்ந்து செல்கிறேன்.
'எந்த ஊரு?'
'கோயம்த்தூரு'. அதான் டி.என். முப்பத்தெட்டு சொல்லுதே, பிறகென்ன கேள்வி.
'சிக்னல்ல என்ன லைட் இருந்துச்சு நீங்க பாஸ் பண்ணும்போது?'
'பச்சை'. ஒரே அடி!
'இல்லை, ரெட்'
'இல்லை, பச்சைதான்'
'கேமராவில் எல்லாம் ரெகார்ட் ஆகியிருக்கு, ரெட்தான்'
'ம்ஹும்'
'உங்க ஊர்ல இப்படிப் போலாமா இருக்கும், இங்கல்லாம் ரெட்னா நிக்கணும்'
'எல்லா ஊர்லயும்தான். ஆனா ரெட் இல்லை, மஞ்சள் விழுந்துது. ஆனா வந்த வேகத்தில் எப்படி நிறுத்தமுடியும்?'
'அதெல்லாம் நான் சொல்லலை. கேமராவில் இருக்கு, என்னோட வர்றீங்களா, காட்டறேன்.'
சார்லீ கம்ப்யூட்டரக் காட்டி மிரட்டினார், இந்தாளு கேமராவைப் பத்திச் சொல்லி பூச்சாண்டியா? 'சென்னை சாலைப்போக்குவரத்து அனுபவங்கள்' எழுத வெச்சிருவார் போல இருக்கே! அட அதுக்கெல்லாம் நேரமில்லை, எழுதினாலும் யாருக்கும் படிக்க பொறுமையிருக்காதுய்யா. கொஞ்சம் பொறுமையிழக்க ஆரம்பிக்கிறேன். ஆள் பார்க்க ஏற்கனவே கட்டிங் அடித்த அல்லது அடிக்கப் போகிற சாயலில், வேலை முடிந்து நங்கநல்லூரோ, மடிப்பாக்கமோ, வீட்டுக்குப் போகிற சாவகாச மூடில் 'வெளியூர் வண்டி, கிடைக்கிறது லாபம்'னு கணக்குப் போட்டு ஒதுக்கற மாதிரி தெரியுது.
வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்துகிறேன்.
'வாங்க போகலாம்'
மாமா வண்டியில் ஏறப் போகிறேன்.
'அங்க வந்து ப்ரூவ் ஆகிருச்சுன்னா டபுள் பைன் தெரியுமல்ல?'
'ஓ'
'ஆமா, சொன்னா ஒத்துக்குங்க'
'இல்ல, நான் ஒத்துக்கல, வாங்க பாத்திருவம்'
'வாங்க...'
'திரும்ப இதே இடத்தில கொண்டுவந்துவிடுவீங்கல்ல' மாமா வண்டியில் ஏற எத்தனிக்கிறேன்.
'ஆமா. சரீ, அப்படியே லைசன்ஸ், ஆர்,சி. இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்துக் காட்டுங்க'
'இந்தாங்க'
ஏய்யா, ஒரு டம்ளர் டீகுடிக்கப்போனாலே, நாலுமுறை பாக்கெட்டைத் தடவிப் பாத்துக்கற ஆளுகிட்ட, பேப்பர்சா கேக்கிற?
'கேமராவெல்லாம் எதுக்கு, இங்கயே ஓட்டை'
'என்ன ஓட்டை'
'பாருங்க, இன்சூரன்ஸ் எக்ஸ்பயர் ஆயிடுச்சு'
'அலோ, அதை விடுங்க, இன்னொரு காயிதம் இருக்கு பாருங்க, அதைப் படிங்க.'
மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் சாளேசரக் கண்ணாடியில்லாமல் இன்சூரன்ஸ்காரன் எழுத்து எனக்குப் படிக்கமுடியவில்லை.
'ம்..சரியாத்தான் இருக்கு..'
'எல்லாம் சரியாத்தான் இருக்கும். சரி, வாங்க, கேமராவைக் காட்டுங்க'
'சரி, சரி, போகட்டும், இனிமேலாவது பாத்து ஒட்டூங்க'
'சேரி. இனி ஒருதடவைக்கு ரெண்டுதடவை பாத்து ஓட்டுறேன்'
ஒண்ணும் தேறலை. போய்விட்டார்.
ப்ளாட்பாரத்தில் ஒரு ஆள்: 'சார் நீங்க விடாம பேசினதால விட்டுட்டான் சார், இல்லாட்டி, காசு வாங்காம விடமாட்டான் சார்.'
என்னமோ சாதிச்ச மாதிரி ஜம்பமா கிளம்புறேன். இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
இணையத்திலே தமிழ் வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்மணம் சேவையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு வாழ்த்துகள் . என்னடா இது சோதனை , வலை...
-
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...