திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 04, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு - சில எண்ணங்கள்

இது முழுமையான விமர்சனமல்ல. படத்தைப் பார்த்ததும் தோன்றிய சில கோர்வையற்ற எண்ணங்களின் தொகுப்பே.
  • படத்துக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை. (இது அறிவுஜீவிக்காத சாதாஜீவிங்கோ)
  • சத்யராஜின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. மனிதர் விருதுக்குத் தயாராகி வருகிறார்.
  • சத்யராஜ் உள்பட இன்னும் பலரின் பேச்சு வழக்கு சரியான கடலூர் வட்டார வழக்காகத் தெரியவில்லை.
  • அர்ச்சனா அடிக்கடி ஆங்காரமாய் அலறுவது எரிச்சலாயிருக்கிறது. எங்கள் பின் இருக்கையிலிருந்தவர்கள் அடுத்த முறை அர்ச்சனா எழும்போதே கூடக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்
  • இரண்டாம் நாள், சனி இரவுக் காட்சிக்கே சிறிய தர்சனா தியேட்டரில் இருக்கைகள் காலி என்பது வரவேற்புக் குறைவைக் காட்டுகிறது
  • எல்லாருமே ரொம்பப் பேசுகிறார்கள். 'ஒளி ஓவியர்' பேச்சைக் குறைத்து விசுவல்களை அதிகம் பயன்படுத்தவேண்டாமா?
  • எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று என்னால் படத்துடன் ஒன்ற இயலாமல் செய்கிறது. வெயில், காதல் அளவுக்கு உணர்ச்சிகரமாக இல்லை.
  • நினைத்தது போலவே, மகனுக்கும் மகளுக்கும் பிடித்திருக்காது. கூட்டிவராதது நல்லதாய்ப் போயிற்று. அவர்கள் அப்பச்சியுடன் அழுகிய தமிழ்மகனை சந்தோசமாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள்.
இலவச விளம்பரம்: இதே பெயரில் ரொம்ப நாள் முன் செய்த உப்புமா.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...