விலங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விலங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 14, 2007

மனிதனுக்கும் விலங்குகளுக்குமான மோதல்கள்



(நான்கு படங்களும் 14-12-2007 தினகரன் கோவைப் பதிப்பிலிருந்து நன்றியுடன் சுடப்பட்டவை)

காட்டு விலங்குகள் தங்கள் வசிப்பிடத்தில் மனிதன் ஊடுருவி அவற்றின் வாழ்வை நெருக்குதலுக்குள்ளாக்குவதைப் பொறுக்கமாட்டாமல் மனிதனுடன் மோத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இந்த ஒரு வாரத்தில் கோவை மாவட்டத்தில் நடந்த மூன்று நிகழ்வுகள் உணர்த்துவதாகத் தெரிகின்றது.



ஒரு வாரமாக மதுக்கரை வனப்பகுதியிருந்து வழி தெரியாமலோ, நான்கு யானைகள் இரை/நீர் தேடியோ வன எல்லையிலிருந்து 30-40 கிமீ வரை வெளியே வந்து தங்களுக்கும் பொதுமக்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி இன்று காலை வரை தங்கள் எல்லைக்குள் போகாமல் அலைந்துகொண்டிருக்கின்றன. இதுவரை இருவரை மிதித்துக் காயப்படுத்தியிருக்கின்றன. கும்கி யானைகளைக் கொண்டு விரட்டியும் வெற்றி கிட்டாமல் நேற்று கோவை மாநகர எல்லைக்குள்ளேயே வந்தும் விட்டன.



வாலபாறையில் தேயிலைத் தோட்டத்திற்கருகில் இரவில் ஒரு 11 வயது சிறுமியை நேற்று முன் தினம் ஒரு சிறுத்தைப் புலி கடித்துக் கொன்றுவிட்டது. வால்பாறை பகுதியில் யானைக் கூட்டம் குடியிருப்புகளுக்குள்ளும், தேயிலைத் தோட்டங்களுக்குள்ளும் புகுந்து சேதம் விளைவிப்பது அடிக்கடி நடக்கிறது.



'அமராவதி ஆற்றில் முதலைகள்' என்று செய்திகள் வந்தாலும் (சென்ற மாதம் போனபோது ஆற்றுக்குள் இறங்கி பாறைகள் மேல் அமர்ந்து இளைப்பாறும்போதும் பயம் இருந்தது) இன்று படத்துடன் செய்தி வந்திருக் கிறது. சாதாரணமாக குளிக்க துணி துவைக்க ஆற்றுக்குப் போகும் மக்கள் இதனால் பீதியடையவும் வாய்ப்பிருக்கிறது.

மனிதன் அனாவசியமாக விலங்குகளோடு மோதுகிறானோ? இல்லை, விலங்குகள் தான் தன் வரம்பை மீறி மனிதனோடு விளையாடுகின்றனவோ?

(இது சம்பந்தமாக பத்திரிகைச் செய்தியிலிருந்து படங்கள் சுட்டுப் போடநினைத்தேன் இப்போது முடியவில்லை. மாலையில் முயற்சிக்கிறேன்) சுட்டாச்சு போட்டாச்சு.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...