புதன், செப்டம்பர் 17, 2003

மனிதனின் உணவு தர்மம் - 1

சைவம்/அசைவம் இரண்டுவகை உணவு உண்பதுபற்றி எத்தனை வாதங்கள் பிரதிவாதங்கள்! தீர ஆராய்ந்தால் மனிதனுக்கு விதிக்கப்பட்டது சைவ உணவு தான், அசைவம் பிறழ்நெறி தான் என்பது தெளிவாகிறது. எப்படி? இதைப்பல தலைப்புகளில் ஆராயலாம். அறிவியல், ஆரோக்யம், சுற்றுச்சூழல், சமயம்/மெய்யுணர்வு என்று பல கோணங்களில் இதை ஆராயலாம்.

அறிவியல்/உடல்கூறு காரணங்கள்:

மனிதனின் உடல்கூறு புல்பூண்டுகளை உண்ணும் ஆடு,மாடு, யானை, மான் போன்ற விலங்குகளையே (சாகபட்சிணிகள்) பெரிதும் ஒத்திருக்கிறது. மாறாக மாமிசபட்சிணிகளான சிங்கம், புலி, கரடி போன்றவற்றின் உடல் கூறுகள் மனிதனிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கின்றன. எப்படி?
இரு வகை விலங்குகளின் உடலியல் கூறுகளை ஒப்பு நோக்குகையில் கீழே உள்ளவாறு அவை அமைகின்றன.




































செய்கை/அமைப்பு

சாகபட்சிணிகள்


மாமிசபட்சிணிகள்
வேர்வை வெளியேற்றுதல்தோலின் துவாரங்கள் வழியாகதோலில் துவாரங்கள்
இல்லை.நாக்கை வேகமாக உள்ளே-வெளியே அசைப்பதன் மூலமும், வேகமாக மூச்சு விடுவதன்
மூலமுமே அவை தன் மேனியின் சூட்டைப் பராமரிக்கின்றன.
தண்ணீர் குடித்தல்
உறிஞ்சிக் குடிக்கின்றன
நாக்கால் நக்கிக்
குடிக்கின்றன
பற்கள்/தாடைகள் அமைப்புசிறிய முன்பற்கள். அரைத்து
விழுங்க கடைவாய்ப் பற்கள் உண்டு. இடம் வலமாய் அசையும் தாடை.
வேட்டையைப் பிடித்துக் கொள்ள,
சதையைப் பிடுங்கி உண்ண நீண்ட கூரிய முன்பற்கள் உண்டு. தாடை பக்க வாட்டில்
அசைவதில்லை
நகங்கள் கூர்மையற்ற நகங்கள்கூரிய, உள்ளிழுக்கக்கூடிய
நகங்கள், வேட்டைக்கு உதவுகின்றன
குடல்/ஜீரண அமைப்புஉடல் நீளத்தைபோல் 10-12
மடங்கு நீளம் கொண்டவை. சைவ உணவு கெட்டுப்போய் உணவுப்பாதை பாதிக்கப்படாததால்
இந்த நீளத்தால் நன்மையே.
உடல் நீளத்தை போல் 3 மடங்கு
தான் நீளம்.? மாமிசம் சீக்கிரம் கெட்டுப் போகக் கூடியது? என்பதால்,
உணவு சீக்கிரம் குடல்பயணத்தை முடித்து வெளியே தள்ளப்படுகிறது.
உமிழ்நீர்மிகக்குறைவான அமிலச்சத்து,
சைவ உணவு செரிக்க இது போதும்
10 மடங்கு செறிவான
அமிலச்சத்து, மாமிசம் மற்றும் எலும்புகளை செரிக்க தேவைப்படுகிறது.


இந்த வகையில் ஆராய்ந்தால் மனிதனின் உடல்கூறு எல்லாவிதத்திலும் சாகபட்சிணிகளை பெரிதும் ஒத்திருக்கிறது தெரிகிறது. வேறு கோணங்களில் இதே கருத்தை பின்னர் ஆராய்வோம்

தொடரும்..

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...