திங்கள், ஆகஸ்ட் 04, 2008

பெரியாரைக் கேளுங்கள் - குறுமம் 1: பெரியார்

முதலில் இதைப் படித்துவிடுங்கள்:

பெரியாரைக் கேளுங்கள் - 24 குறுமங்கள் : ஆக்கம்- மா. நன்னன்

.
.
.
தங்களின் தாய்மொழி யாது?

என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்த போதிலும் அதனை நான் தினசரிப் பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிலும் தமிழ் மொழியினைத்தான் பயன்படுத்தி வருகின்றேன். எனக்குக் கன்னடத்தைவிடத் தெலுங்கில் கொஞ்சம் பயிற்சி உண்டு . எப்படி என்றால் வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். இருந்தாலும் தமிழ் மொழியில்தான் என்னுடைய கருத்துக்கள் அத்தனையும் நான் நினைக்கிற மாதிரி வெளிப்படுத்த முடியும்.
.
.
.
தாங்கள் சர்வாதிகாரிதானே அய்யா?

நான் சர்வாதிகாரம் செய்கிறேன் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான்; ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆணவத்திற்காகச் சர்வாதிகாரியல்ல; நான் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பு அம் மாதிரியானது. சர்வாதிகாரத் தன்மை இல்லாமல் பயன்தரக் கூடாதது. இச் சர்வாதிகாரத் தன்மையும் எனக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டது முதற்கொண்டே, ஏன் அதற்கு முன்பிருந்தேகூட நான் சர்வாதிகாரியாகவே இருந்திருக்கிறேன்.
.
.
.
தங்கள் சொற்பொழிவு எதை அடிப்படையாகக் கொண்டிருக்கும்?

பேச்சு என்றால் சிலர் அழகுக்குப் பேசுவார்கள். சிலர் அலங்காரத்திற்காகப் பேசுவார்கள்; மக்கள் சிரிக்க வேண்டும், கைதட்டவேண்டும் என்று சிலர் பேசுவார்கள். சிலர் தான் கற்றவைகளை வெளியிடுவதே முக்கியம் என்று பேசுவார்கள்; சிலர் தன் கருத்தை வெளியிடப் பேசுவார்கள். கடைசியில் சொன்ன ரகத்தினன்தான் நான்.
.
.
.
தமிழகப் பத்திரிகைகளின் ஆதரவு தங்களுக்குக் கிடைத்ததுண்டா?

நான் எனது பொதுவாழ்வு ஆரம்பம் முதலே பத்திரிகைக்காரன்கள் தயவை நாடி முன்னேறியவன் அல்ல; அவர்களை வெறுத்துக்கொண்டு, எதிர்நீச்சல் அடித்துத்தான் முன்னேறிவருகிறேன்.
.
.
.
காந்தியடிகளுக்கும் தங்களுக்கும் உள்ள வேறுபாடு யாது?

காந்தி, தீண்டப்படாதவர்களை (எனக்கு மிகவும் பிடித்தது 'தீண்டப்படாதவர்கள்' என்று பெரியார் குறிப்பிட்டது. 'தீண்டத்தகாதவர்கள்' என்பது சரியாகப்படவில்லை:காசி) கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் 'வேறு தனிக்கிணறு கட்டிக்கொடு கோவிலுக்குள் விடாவிட்டால் வேறுதனிக் கோவில் கட்டிக்கொடு' என்றார். அப்போது நான் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் - அவன் தண்ணீரில்லாமல் சாகட்டும்; அவனுக்கு இழிவு நீங்கவேண்டுமென்பது முக்கியமே தவிர தண்ணீரல்ல என்றேன்.


இதுபோல 106 கேள்விகளும் அவற்றுக்குப் பெரியாரின் பதிலும் இக்குறுமத்தில் இடம் பெற்றுள்ளன.

அடுத்து வருவது... 2. ஒழுக்கம்

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...