ஞாயிறு, டிசம்பர் 23, 2007

அறிவுக்களஞ்சியம் விருது 2008

நண்பர் முனைவர் சேயோனிடமிருந்து வந்த மடல்:

எம்.டி.எஸ். அகடெமி
எண் 4, கிழக்கு மாட வீதி,
மைலாப்பூர்,
சென்னை - 600 004
தொலைபேசி: 044-24951415 செல்பேசி: 9444991415
மின்னஞ்சல்: mtsacademy@yahoo.co.in


அறிவுக்களஞ்சியம் விருது 2008 - இளைஞருக்கான போட்டிகள்

தேசிய இளைஞர் நாளாக அனுசரிக்கப்படும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு எம்.டி.எஸ். அகடெமி, நேரு யுவ கேந்திரா, இந்திய அரசின் இளைஞர் விவகாரம் & விளையாட்டு அமைச்சகம், சென்னைப் பல்கலைக் கழகத்தின் தேசிய சேவைத் திட்டம் ஆகியோர் இணைந்து அறிவுக்களஞ்சியம் விருது 2008 - இளைஞருக்கான போட்டிகளை நடத்துகின்றனர். 16 வயது முதல் 30 வரையிலான இந்தப் போட்டிகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரும் ஜனவரி 5-ஆம் நாள் சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் நடைபெறும்.

உத்தேசமாக 10 விருதுகள் கீழ்க்கண்ட பிரிவுகளில் அளிக்கப்படவிருக்கின்றன.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் பேச்சுப்போட்டி (3 போட்டிகள்)
(தலைப்பு: இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் செய்தி)

தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் கட்டுரைப்போட்டி (3 போட்டிகள்)
(தலைப்பு: திருவள்ளுவர் வலியுறுத்தும் வாழ்வியல் நெறிகள்)

தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் கவிதைப்போட்டி (3 போட்டிகள்)
(தலைப்பு: மானுடம் போற்றும் மகாத்மா காந்தி)

இசைப்போட்டி (1 போட்டி)
(தலைப்பு:திருக்குறள், திருவள்ளுவர், விவேகானந்தர், மகாத்மா காந்தி பற்றிய பாடல்கள்)

முதல் பரிசு: ருபாய் 2000/- மதிப்புள்ள அறிவு மலர் விருது
இரண்டாம் பரிசு: ருபாய் 1500/- மதிப்புள்ள அறிவுக்கதிர் விருது
மூன்றாம் பரிசு: ருபாய் 1000/- மதிப்புள்ள அறிவுத்தளிர் விருது
நான்காம் பரிசு பரிசு: ருபாய் 700/- மதிப்புள்ள அறிவுத்துளிர் விருது
ஐந்தாம் பரிசு: ருபாய் 500/- மதிப்புள்ள அறிவுப்புதிர் விருது

மேற்குறிப்பிட்ட எல்லாப் (பத்து) போட்டிகளிலும் பங்கேற்று மிக அதிக தரமதிப்பெண் பெறும் இளைஞருக்கு ரூபாய் 3000/- மதிப்புள்ள அறிவுக்களஞ்சியம் விருது 2008 வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் பதிவுக் கட்டணமாக ஒரு போட்டிக்கு ரூபாய் 10/- செலுத்தி மேற்கண்ட முகவரியில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

அனைவரின் பங்கேற்பையும் ஆதரவையும் வேண்டி,
-முனைவர். சேயோன்,
கௌரவ செயலாளர்.

வெள்ளி, டிசம்பர் 14, 2007

மனிதனுக்கும் விலங்குகளுக்குமான மோதல்கள்



(நான்கு படங்களும் 14-12-2007 தினகரன் கோவைப் பதிப்பிலிருந்து நன்றியுடன் சுடப்பட்டவை)

காட்டு விலங்குகள் தங்கள் வசிப்பிடத்தில் மனிதன் ஊடுருவி அவற்றின் வாழ்வை நெருக்குதலுக்குள்ளாக்குவதைப் பொறுக்கமாட்டாமல் மனிதனுடன் மோத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இந்த ஒரு வாரத்தில் கோவை மாவட்டத்தில் நடந்த மூன்று நிகழ்வுகள் உணர்த்துவதாகத் தெரிகின்றது.



ஒரு வாரமாக மதுக்கரை வனப்பகுதியிருந்து வழி தெரியாமலோ, நான்கு யானைகள் இரை/நீர் தேடியோ வன எல்லையிலிருந்து 30-40 கிமீ வரை வெளியே வந்து தங்களுக்கும் பொதுமக்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி இன்று காலை வரை தங்கள் எல்லைக்குள் போகாமல் அலைந்துகொண்டிருக்கின்றன. இதுவரை இருவரை மிதித்துக் காயப்படுத்தியிருக்கின்றன. கும்கி யானைகளைக் கொண்டு விரட்டியும் வெற்றி கிட்டாமல் நேற்று கோவை மாநகர எல்லைக்குள்ளேயே வந்தும் விட்டன.



வாலபாறையில் தேயிலைத் தோட்டத்திற்கருகில் இரவில் ஒரு 11 வயது சிறுமியை நேற்று முன் தினம் ஒரு சிறுத்தைப் புலி கடித்துக் கொன்றுவிட்டது. வால்பாறை பகுதியில் யானைக் கூட்டம் குடியிருப்புகளுக்குள்ளும், தேயிலைத் தோட்டங்களுக்குள்ளும் புகுந்து சேதம் விளைவிப்பது அடிக்கடி நடக்கிறது.



'அமராவதி ஆற்றில் முதலைகள்' என்று செய்திகள் வந்தாலும் (சென்ற மாதம் போனபோது ஆற்றுக்குள் இறங்கி பாறைகள் மேல் அமர்ந்து இளைப்பாறும்போதும் பயம் இருந்தது) இன்று படத்துடன் செய்தி வந்திருக் கிறது. சாதாரணமாக குளிக்க துணி துவைக்க ஆற்றுக்குப் போகும் மக்கள் இதனால் பீதியடையவும் வாய்ப்பிருக்கிறது.

மனிதன் அனாவசியமாக விலங்குகளோடு மோதுகிறானோ? இல்லை, விலங்குகள் தான் தன் வரம்பை மீறி மனிதனோடு விளையாடுகின்றனவோ?

(இது சம்பந்தமாக பத்திரிகைச் செய்தியிலிருந்து படங்கள் சுட்டுப் போடநினைத்தேன் இப்போது முடியவில்லை. மாலையில் முயற்சிக்கிறேன்) சுட்டாச்சு போட்டாச்சு.

செவ்வாய், டிசம்பர் 04, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு - சில எண்ணங்கள்

இது முழுமையான விமர்சனமல்ல. படத்தைப் பார்த்ததும் தோன்றிய சில கோர்வையற்ற எண்ணங்களின் தொகுப்பே.
  • படத்துக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை. (இது அறிவுஜீவிக்காத சாதாஜீவிங்கோ)
  • சத்யராஜின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. மனிதர் விருதுக்குத் தயாராகி வருகிறார்.
  • சத்யராஜ் உள்பட இன்னும் பலரின் பேச்சு வழக்கு சரியான கடலூர் வட்டார வழக்காகத் தெரியவில்லை.
  • அர்ச்சனா அடிக்கடி ஆங்காரமாய் அலறுவது எரிச்சலாயிருக்கிறது. எங்கள் பின் இருக்கையிலிருந்தவர்கள் அடுத்த முறை அர்ச்சனா எழும்போதே கூடக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்
  • இரண்டாம் நாள், சனி இரவுக் காட்சிக்கே சிறிய தர்சனா தியேட்டரில் இருக்கைகள் காலி என்பது வரவேற்புக் குறைவைக் காட்டுகிறது
  • எல்லாருமே ரொம்பப் பேசுகிறார்கள். 'ஒளி ஓவியர்' பேச்சைக் குறைத்து விசுவல்களை அதிகம் பயன்படுத்தவேண்டாமா?
  • எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று என்னால் படத்துடன் ஒன்ற இயலாமல் செய்கிறது. வெயில், காதல் அளவுக்கு உணர்ச்சிகரமாக இல்லை.
  • நினைத்தது போலவே, மகனுக்கும் மகளுக்கும் பிடித்திருக்காது. கூட்டிவராதது நல்லதாய்ப் போயிற்று. அவர்கள் அப்பச்சியுடன் அழுகிய தமிழ்மகனை சந்தோசமாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள்.
இலவச விளம்பரம்: இதே பெயரில் ரொம்ப நாள் முன் செய்த உப்புமா.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...