பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
பயனர்கள் தமிழ்மணம் தள இயக்கம் பற்றிய தங்கள் கருத்துக்களை/கேள்விகளை விவாதிக்க ஒரு மேடை வேண்டும் என்பதால் முதலில் குறைந்த வசதிகளுடன் ஒரு மன்றம் அமைக்கப்பட்டது. பிறகு phbb forum என்ற திறமூல நிரல்பொதியை தமிழ்ப்படுத்தி தமிழ்மணம் தளத்துக்குள்ளேயே இயங்குமாறு அமைத்தேன். ஆனாலும், இந்தத் தமிழ்ப்படுத்திய நிரல்பொதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. காரணம், இது முழுமையான தமிழ்ப்படுத்தலன்று என்பதும், அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்குக்குத் தேவையான நேரமும் பொறுமையும் எனக்கு அப்போது இல்லை என்பதும். ஆயினும் தனிப்பட்டமுறையில் என்னிடம் கேட்ட சில நண்பர்களுக்கு அதன் மொழியாக்கம் செய்யப்பட்ட கோப்பைப் பகிர்ந்துகொண்டேன்.
இந்த மன்ற நிரல்பொதி ஒரு முழுமையான மன்றத்தை இயக்கும் ஆற்றல்மிக்க பொதி. ஆற்றலுடன் கூடவே பாதுகாப்புச் சிக்கல்களும் இருந்தன. எனவே இந்த மன்றத்தை நிர்வகிக்கும் பணியை ஒருவர் பொறுப்பேற்றுச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நண்பர் பரிமேலழகரிடம் கேட்டதில் உடனே ஏற்றுக்கொண்டார். அப்படியும் இரு முறை இந்த மன்றம் கொந்தர்களின் (hackers) வன்தாக்குதலுக்கு ஆளானது. பல முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இழக்கப்பட்டன. அதன் பின்னர் ஓரளவு மீட்டெடுக்க முடிந்தாலும் இதுதான் சரியான முறையா என்ற கேள்வி தொடர்ந்து எழவும், மன்ற நிரல் பொதியைக் கையாளும் நிரலாளர்களின் வலைத்தளமே (www.phbb.com) பலமுறை கொந்தப்படுவதைப் பார்த்ததாலும், இதைக் கைவிட்டு, கூகிள் குழுமத்துக்கு மன்றத்தை மாற்றியமைத்தேன். இதன்மூலம் குறைந்தபட்சம் மேலும் மடல் பரிமாற்றங்கள் இழப்பதை நிறுத்த முடிகிறது.
இந்த மன்றம் என்பது பயனர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் இடமாக இருக்கவேண்டும், அவர்களால் தீர்வு சொல்ல இயலாத பிரச்னைகளுக்கு தமிழ்மண நிர்வாகிகளோ, நானோ பதிலளிக்குமாறு இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. நம் பயனர்கள் இதை 1-800-... வாடிக்கையாளர் சேவை மையமாகத் தான் பார்த்தார்கள். முழுக்க விளக்கப்பட்ட பிரச்னைகளுக்கும் எதையுமே வாசிக்காமல், தாங்களும் யோசிக்காமல் கேள்விகள் கேட்கப்படுவது வாடிக்கையாக நடக்கிறது. ஒரு வணிக நிறுவனம் அளிக்கும் வாடிக்கையாளர் சேவை என்றால் இப்படிக் கேட்பதில் தவறில்லை. பயனர் கையேட்டில் குறிப்பிட்டிருந்தாலும் வாடிக்கையாளர் அதைப் படிக்காமல் கேட்டாலும், சேவை அளிப்பவர் பதில் சொல்லியாக வேண்டியது கட்டாயம். ஆனால் ஆர்வத்தில் செய்யப்படும் தமிழ்மணம் போன்ற முயற்சிகளில் இதே வாடிக்கையாளர் சேவையை எதிர்பார்ப்பது நியாயமில்லை அல்லவா?
பல கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கப்பட்ட உதவிப்பக்கங்கள் உள்ளன. அதிலும் விடுபட்டிருப்பின், பதில் தெரிந்த 100 பேர் இங்கே இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. நூற்றில் ஒருவர் சிரமமெடுத்து சில சமயம் சொல்லுவார். அவரும் சில நாளில் மனம் சோர்ந்தோ என்னவோ மேலும் அதைத் தொடர முடியாமல் விட்டுவிடுவார். ஆனால் 'கேட்டேன், பதிலில்லை' என்று ஒற்றைத்தனமாக தமிழ்மணம் சேவையை மட்டந்தட்டிப் பேசி, அதற்கும் ஒரு மடலோ, இடுகையோ எழுதிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பதைப் பார்த்து மனம் நொந்ததும் உண்டு. இதுபோன்று கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் உள்ள சிரமத்துக்கு வணிக நிறுவனங்களுக்கும் தமிழ்மணத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடான இலவசம் (அதனால் ஆள்போட்டு நடத்த முடியாது, அதனால் எல்லாரையும் திருப்தி செய்ய முடியாது) என்ற காரணியைச் சுட்டினால், 'ஃப்ரீன்னா ஃபினாயிலையும் குடிக்கமுடியுமா?' என்ற கொச்சைப் பேச்சும் கேட்டதுண்டு. இன்னும் சில பெரிய மனிதர்கள் மன்றத்தில்கூட கேட்காமல் தங்கள் பதிவிலேயே எழுதிவிட்டு தமிழ்மணம் பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்து, பதில்வராததால் கோபித்ததும் உண்டு. தமிழ்ச் சமூகத்துக்கு சேவையளிக்க முனையும் எவரும் இந்நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி தகுந்த ஏற்பாடுகளுடனும் மனநிலையுடனும் நடந்துகொள்வது அவசியம் என்பது என் அனுபவம்.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
செவ்வாய், ஜூலை 11, 2006
வெள்ளி, ஜூலை 07, 2006
சில முயற்சிகள் சில அனுபவங்கள் -6
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5
பாராட்டுக்கள் குவிந்தபோதே சச்சரவுகளும் இருந்தன.
தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளுக்கு மட்டும் என்ற கொள்கையால் ஆங்கில வலைப்பதிவு ஒன்றை ஏற்க மறுத்ததற்கு தன்னை இசைக்கலைஞர் என்று அறிவித்துக்கொண்ட ஒரு வலைப்பதிவர் மரியாதைக்குறைவாக தன்னுடைய வலைப்பதிவில் எழுதியதும் நடந்தது. தமிழ்மணம் சேவை பெறும் அவரின் நெருங்கிய நண்பர்கள் பலரும் அன்று குறைந்த பட்ச நாகரிகத்துக்காகவாவது அவருக்குக் கண்டனம் தெரிவிக்காததைப் பார்த்த போதுதான் தமிழ் இணையம் ஒரு வெளிப்படையான உலகம் அல்ல, இங்கே மாயச் சுழல்கள் பல ஏற்கனவே இயங்குகின்றன என்ற புரிந்துணர்வு எனக்கு வந்தது. ஆனால் இன்று இருக்கும் போலிகளையும் முகமிலிகளையும் பார்த்தால் அவர் எழுதியது பெரிய எரிச்சலைத்தராது என்பது உண்மை.
தானே தன் வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கலாம் என்பது ஆரம்ப காலம் முதலே இருந்த நடைமுறை. இதில் இன்று இருக்கும் கட்டுப்பாடுகள் அன்று இல்லை. ஒருவர் தன் வலைப்பதிவைச் சேர்த்த அடுத்த நொடியே அது பட்டியலிலும் திரட்டியிலும் தெரிய ஆரம்பித்துவிடும். அந்தரங்கமான விஷயங்களை ஒருவர் எழுதி இப்படிச் சேர்த்த பின்னரே இதன் அபாயம் புரிந்து, முன்பார்வையிட்டு நிர்வாகி ஒருவர் சேர்க்கும் முறை வந்தது. பெயருக்கு ஒன்றை தொடங்கி தமிழ்மணத்தில் சேர்த்து, பின் கிடப்பில் போடுவதைப் பார்த்தே 3 இடுகைகளாவது எழுதிய பின்னரே சேர்க்கப்படும் என்ற நடைமுறை வந்தது.
வலைப்பூ ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதே ஒரு தரவுத்தளத்தை ஏற்படுத்தி அனைவரையும் தங்கள் தகவல்களை உள்ளிடச் சொல்லிக் கேட்டிருந்தேன். அப்போது தமிழ்மணம்.காம் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தப் போகிறது என்ற விவரமான திட்டம் இல்லை. ஒழுங்கற்ற வடிவத்தில் தரவுகள் இருப்பதை விட சீரான கட்டமைப்பில் தரவுகள் இருப்பது அவற்றின் பயன்பாட்டினை விரிவாக்கும் என்ற நம்பிக்கையில் செய்தது அது. தமிழ்மணம் வெளியிடும்போது அன்றுவரை இந்த தரவுத்தளத்தில் தன் விவரங்களைச் சேர்த்த வலைப்பதிவுகளை மட்டும் (108 என்று நினைவு) நானாக சேர்த்துவிட்டேன். (இப்படி திறந்த இடத்தில் கிடைத்த பட்டியலைக் கொண்டு தொடங்கப்பட்டதாலே தமிழ்மணம் முதல்பதிப்பு 800க்கும் மேல் வளர்ந்தும், பதிவுகளின் பட்டியலை மூடி வைக்காமல் opml வடிவில் யாருக்கும் கிடைக்கச் செய்தேன். அதுவே தேன்கூடு போன்ற முயற்சிகளுக்கு ஆதாரமாக இருந்தது.) அப்படி அதுவரை தாங்களாக முன்வந்து அளிக்காதவர்களை ஒதுக்குவதல்ல என் நோக்கம். அவர்களும் நொடியில் தங்கள் தகவல்களைச் சேர்த்து இணைந்துகொள்ள தமிழ்மணத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் புரிந்துகொள்ளாமல், 'ஏன் என் வலைப்பதிவைச் சேர்க்கவில்லை', 'ஏன் என் நண்பருடைதைச் சேர்க்கவில்லை' என்று கூவியவர்களும் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுமையாக பதில் சொல்லி விளக்கம் கொடுத்த பின்னும் இது நடந்ததிலிருந்து இந்த சமூகம் சுயசேவைக்கு இன்னும் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவில்லை என்றும் புரிந்தது.
தானியங்கிக் கருவியே தற்போக்காக எடுத்த (Randomly picked)10 பதிவுகளை பட்டியலில் காட்டும்போதும் 'என் பெயர் வருவதேயில்லை, காசி தனக்குப்பிடித்த பெயர்களை மட்டும் முன்னிறுத்துகிறார்' என்றும் சிலர் குறைபட்டுக்கொண்டபோது இங்கே எத்தகைய 'தன்னை மையப்படுத்தும், அவநம்பிக்கை நிறைந்த' சூழல் நிலவுகிறது என்று புரிந்தது. இத்தனைக்கும் இப்படிச் சொன்னவர்களில் ஒருவர் தேர்ந்த அறிவியலாளர். இன்னொருவர் மென்பொருள் வல்லுநர்!
பலரும் எழுதுவதில் சிறந்த இடுகைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து தனியாகக் காட்டலாம் என்று சில நண்பர்கள் சொல்லவே, மேற்சொன்ன சூழல் அளித்த பயத்தால் 'இப்படிக் காட்டுவதற்கு தேர்வுக்குழு ஒன்றை அமைப்பது சர்ச்சைக்கு வழிவகுக்கும், ஆகவே, ஜனநாயகமுறைப்படி தேர்வு நடக்கட்டும்' என்று சிந்தித்து, வாசகரே வாக்களித்துப் பரிந்துரைக்கும் வசதியை ஏற்படுத்தினேன். அதில் வளைகுடா நாடுகளில் இணையத்தொடர்பு அளிக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் விசேட முறைமையால் கள்ளவாக்குப் போட வாய்ப்பிருப்பதைக் கண்ட நண்பர்கள், 'குறைகளை என்னிடத்தில் சொல்லுங்கள், நிறைகளை நண்பர்களிடத்தில் சொல்லுங்கள்' என்ற மேற்கோளுக்கு நேர் எதிராக இயங்கி, 'இந்தப் பரிந்துரை முறையே ஒரு போங்கு' என்ற நல்ல செய்தியைத் தங்கள் வலைப்பதிவில் எழுதிப் பரப்பி, முறைமை மேம்பட உதவியதும் நடந்தது.
அதன் பின்னர் அதற்கும் ஒரு தீர்வு காணப்பட்டாலும், இணையத்தில் உள்நுழை/மின்னஞ்சல்-அழைப்பு அல்லாத நேரடி வாக்கெடுப்பு முறைகள் எதிலுமே முற்றிலும் நம்பகமானது என்று எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஏசுவது இன்றும் தொடர்கிறது. தன் இடுகைகள் பரிந்துரைக்கப்படாததைப் பொறுக்க முடியாதவர்கள், தங்கள் கருத்துக்கு எதிரானவை பரிந்துரைக்கப்படுவதை சகிக்காதவர்கள் இதை ஏற்றுக்கொள்ளாததும் தொடர்கிறது.
பாராட்டுக்கள் குவிந்தபோதே சச்சரவுகளும் இருந்தன.
தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளுக்கு மட்டும் என்ற கொள்கையால் ஆங்கில வலைப்பதிவு ஒன்றை ஏற்க மறுத்ததற்கு தன்னை இசைக்கலைஞர் என்று அறிவித்துக்கொண்ட ஒரு வலைப்பதிவர் மரியாதைக்குறைவாக தன்னுடைய வலைப்பதிவில் எழுதியதும் நடந்தது. தமிழ்மணம் சேவை பெறும் அவரின் நெருங்கிய நண்பர்கள் பலரும் அன்று குறைந்த பட்ச நாகரிகத்துக்காகவாவது அவருக்குக் கண்டனம் தெரிவிக்காததைப் பார்த்த போதுதான் தமிழ் இணையம் ஒரு வெளிப்படையான உலகம் அல்ல, இங்கே மாயச் சுழல்கள் பல ஏற்கனவே இயங்குகின்றன என்ற புரிந்துணர்வு எனக்கு வந்தது. ஆனால் இன்று இருக்கும் போலிகளையும் முகமிலிகளையும் பார்த்தால் அவர் எழுதியது பெரிய எரிச்சலைத்தராது என்பது உண்மை.
தானே தன் வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கலாம் என்பது ஆரம்ப காலம் முதலே இருந்த நடைமுறை. இதில் இன்று இருக்கும் கட்டுப்பாடுகள் அன்று இல்லை. ஒருவர் தன் வலைப்பதிவைச் சேர்த்த அடுத்த நொடியே அது பட்டியலிலும் திரட்டியிலும் தெரிய ஆரம்பித்துவிடும். அந்தரங்கமான விஷயங்களை ஒருவர் எழுதி இப்படிச் சேர்த்த பின்னரே இதன் அபாயம் புரிந்து, முன்பார்வையிட்டு நிர்வாகி ஒருவர் சேர்க்கும் முறை வந்தது. பெயருக்கு ஒன்றை தொடங்கி தமிழ்மணத்தில் சேர்த்து, பின் கிடப்பில் போடுவதைப் பார்த்தே 3 இடுகைகளாவது எழுதிய பின்னரே சேர்க்கப்படும் என்ற நடைமுறை வந்தது.
வலைப்பூ ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதே ஒரு தரவுத்தளத்தை ஏற்படுத்தி அனைவரையும் தங்கள் தகவல்களை உள்ளிடச் சொல்லிக் கேட்டிருந்தேன். அப்போது தமிழ்மணம்.காம் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தப் போகிறது என்ற விவரமான திட்டம் இல்லை. ஒழுங்கற்ற வடிவத்தில் தரவுகள் இருப்பதை விட சீரான கட்டமைப்பில் தரவுகள் இருப்பது அவற்றின் பயன்பாட்டினை விரிவாக்கும் என்ற நம்பிக்கையில் செய்தது அது. தமிழ்மணம் வெளியிடும்போது அன்றுவரை இந்த தரவுத்தளத்தில் தன் விவரங்களைச் சேர்த்த வலைப்பதிவுகளை மட்டும் (108 என்று நினைவு) நானாக சேர்த்துவிட்டேன். (இப்படி திறந்த இடத்தில் கிடைத்த பட்டியலைக் கொண்டு தொடங்கப்பட்டதாலே தமிழ்மணம் முதல்பதிப்பு 800க்கும் மேல் வளர்ந்தும், பதிவுகளின் பட்டியலை மூடி வைக்காமல் opml வடிவில் யாருக்கும் கிடைக்கச் செய்தேன். அதுவே தேன்கூடு போன்ற முயற்சிகளுக்கு ஆதாரமாக இருந்தது.) அப்படி அதுவரை தாங்களாக முன்வந்து அளிக்காதவர்களை ஒதுக்குவதல்ல என் நோக்கம். அவர்களும் நொடியில் தங்கள் தகவல்களைச் சேர்த்து இணைந்துகொள்ள தமிழ்மணத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் புரிந்துகொள்ளாமல், 'ஏன் என் வலைப்பதிவைச் சேர்க்கவில்லை', 'ஏன் என் நண்பருடைதைச் சேர்க்கவில்லை' என்று கூவியவர்களும் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுமையாக பதில் சொல்லி விளக்கம் கொடுத்த பின்னும் இது நடந்ததிலிருந்து இந்த சமூகம் சுயசேவைக்கு இன்னும் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவில்லை என்றும் புரிந்தது.
தானியங்கிக் கருவியே தற்போக்காக எடுத்த (Randomly picked)10 பதிவுகளை பட்டியலில் காட்டும்போதும் 'என் பெயர் வருவதேயில்லை, காசி தனக்குப்பிடித்த பெயர்களை மட்டும் முன்னிறுத்துகிறார்' என்றும் சிலர் குறைபட்டுக்கொண்டபோது இங்கே எத்தகைய 'தன்னை மையப்படுத்தும், அவநம்பிக்கை நிறைந்த' சூழல் நிலவுகிறது என்று புரிந்தது. இத்தனைக்கும் இப்படிச் சொன்னவர்களில் ஒருவர் தேர்ந்த அறிவியலாளர். இன்னொருவர் மென்பொருள் வல்லுநர்!
பலரும் எழுதுவதில் சிறந்த இடுகைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து தனியாகக் காட்டலாம் என்று சில நண்பர்கள் சொல்லவே, மேற்சொன்ன சூழல் அளித்த பயத்தால் 'இப்படிக் காட்டுவதற்கு தேர்வுக்குழு ஒன்றை அமைப்பது சர்ச்சைக்கு வழிவகுக்கும், ஆகவே, ஜனநாயகமுறைப்படி தேர்வு நடக்கட்டும்' என்று சிந்தித்து, வாசகரே வாக்களித்துப் பரிந்துரைக்கும் வசதியை ஏற்படுத்தினேன். அதில் வளைகுடா நாடுகளில் இணையத்தொடர்பு அளிக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் விசேட முறைமையால் கள்ளவாக்குப் போட வாய்ப்பிருப்பதைக் கண்ட நண்பர்கள், 'குறைகளை என்னிடத்தில் சொல்லுங்கள், நிறைகளை நண்பர்களிடத்தில் சொல்லுங்கள்' என்ற மேற்கோளுக்கு நேர் எதிராக இயங்கி, 'இந்தப் பரிந்துரை முறையே ஒரு போங்கு' என்ற நல்ல செய்தியைத் தங்கள் வலைப்பதிவில் எழுதிப் பரப்பி, முறைமை மேம்பட உதவியதும் நடந்தது.
அதன் பின்னர் அதற்கும் ஒரு தீர்வு காணப்பட்டாலும், இணையத்தில் உள்நுழை/மின்னஞ்சல்-அழைப்பு அல்லாத நேரடி வாக்கெடுப்பு முறைகள் எதிலுமே முற்றிலும் நம்பகமானது என்று எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஏசுவது இன்றும் தொடர்கிறது. தன் இடுகைகள் பரிந்துரைக்கப்படாததைப் பொறுக்க முடியாதவர்கள், தங்கள் கருத்துக்கு எதிரானவை பரிந்துரைக்கப்படுவதை சகிக்காதவர்கள் இதை ஏற்றுக்கொள்ளாததும் தொடர்கிறது.
-தொடரும்
சில முயற்சிகள் சில அனுபவங்கள் -5
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4
தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முயற்சிகள் என்றால் மதி/சுரதாவின் உதவிப் பக்கங்கள், வளைகுடாப்பகுதியில் வசித்த உமர் தயாரித்து அளித்த தேனீ இயங்கு எழுத்துரு, மலேசியாவிலிருந்த முகுந்த் தலைமையில் தமிழா குழு அளித்த இ-கலப்பை தட்டச்சு செலுத்தி, மறுமொழியிடலை எளிதாக்கிய ஜெர்மனிவாழ் சுரதாவின் பொங்குதமிழ் ஜாவாஸ்க்ரிப்ட் நிரல் ஆகியனவற்றைச் சொல்லலாம். முக்கியமாக தேனீ இயங்கு எழுத்துரு தயாரிக்கையில் உமர் கூடுதல் முயற்சி எடுத்து எல்லாத் தளங்களிலும் அது இயங்குமாறு செய்திருந்தது ஒரு சிறப்பு.
இவை அனைத்தும் பொதுநல நோக்கில் விருப்பு வெறுப்பின்றி இலவசமாகவே அளிக்கப்பட்டன. ஆகவே, இவற்றின் நீட்சியாக தமிழ்மணம் சேவையும் இலவசமாகவே என்றும் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு அடிப்படைக் கொள்கையாகக் கொண்டேன். இத்தனைக்கும் ப்ளாக்கர்.காம் வலைப்பதிவுகளில் மறுமொழிச் சேவை இல்லாததால் என் வலைப்பதிவுக்கு backblog.com என்ற, வெளியிலிருந்து இயங்கும் மறுமொழிச் சேவையைப் பெற வருடம் $10 சந்தா கட்டியிருக்கிறேன். இன்று தமிழ்மணம் திரட்டி இலவசமாக அளிக்கும் சேவைகள் விலை கொடுத்துப் பெற்ற இந்த சேவையின் வேலைத்திறனை விட பல மடங்கு இருக்கும் என்பது கண்கூடு.
சுரதாவின் முயற்சியில் ஒரு வலைத்திரட்டி உருவாவது அறிந்து அவருடனும் தொடர்பு கொண்டு தமிழ்மணம் உருவாவதைப் பகிர்ந்துகொண்டபோது இரண்டும் வேறுவேறு நுட்பத்தில் இயங்குவதை விளக்கி, தமிழ்மணம் இயக்கும் நுட்பத்தின் கூடுதல் சிறப்பைக் குறிப்பிட்டு மனதாரப் பாராட்டினார். அத்துடன் தமிழ்மணத்தின் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியான பல ஆலோசனைகளை வ்ழங்கி மேம்படுத்தலுக்கும் உதவினார்.
முகுந்த்தும் ஒரு திரட்டியை தன்னுடைய தளத்தில் நிறுவியிருந்தார். ஆனால் சரியாக அதை வளர்த்து சீராட்டுவதன் தேவையை உணராததாலோ என்னவோ அது பிரபலமாகாமலேயே போய்விட்டது.
தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முயற்சிகள் என்றால் மதி/சுரதாவின் உதவிப் பக்கங்கள், வளைகுடாப்பகுதியில் வசித்த உமர் தயாரித்து அளித்த தேனீ இயங்கு எழுத்துரு, மலேசியாவிலிருந்த முகுந்த் தலைமையில் தமிழா குழு அளித்த இ-கலப்பை தட்டச்சு செலுத்தி, மறுமொழியிடலை எளிதாக்கிய ஜெர்மனிவாழ் சுரதாவின் பொங்குதமிழ் ஜாவாஸ்க்ரிப்ட் நிரல் ஆகியனவற்றைச் சொல்லலாம். முக்கியமாக தேனீ இயங்கு எழுத்துரு தயாரிக்கையில் உமர் கூடுதல் முயற்சி எடுத்து எல்லாத் தளங்களிலும் அது இயங்குமாறு செய்திருந்தது ஒரு சிறப்பு.
இவை அனைத்தும் பொதுநல நோக்கில் விருப்பு வெறுப்பின்றி இலவசமாகவே அளிக்கப்பட்டன. ஆகவே, இவற்றின் நீட்சியாக தமிழ்மணம் சேவையும் இலவசமாகவே என்றும் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு அடிப்படைக் கொள்கையாகக் கொண்டேன். இத்தனைக்கும் ப்ளாக்கர்.காம் வலைப்பதிவுகளில் மறுமொழிச் சேவை இல்லாததால் என் வலைப்பதிவுக்கு backblog.com என்ற, வெளியிலிருந்து இயங்கும் மறுமொழிச் சேவையைப் பெற வருடம் $10 சந்தா கட்டியிருக்கிறேன். இன்று தமிழ்மணம் திரட்டி இலவசமாக அளிக்கும் சேவைகள் விலை கொடுத்துப் பெற்ற இந்த சேவையின் வேலைத்திறனை விட பல மடங்கு இருக்கும் என்பது கண்கூடு.
சுரதாவின் முயற்சியில் ஒரு வலைத்திரட்டி உருவாவது அறிந்து அவருடனும் தொடர்பு கொண்டு தமிழ்மணம் உருவாவதைப் பகிர்ந்துகொண்டபோது இரண்டும் வேறுவேறு நுட்பத்தில் இயங்குவதை விளக்கி, தமிழ்மணம் இயக்கும் நுட்பத்தின் கூடுதல் சிறப்பைக் குறிப்பிட்டு மனதாரப் பாராட்டினார். அத்துடன் தமிழ்மணத்தின் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியான பல ஆலோசனைகளை வ்ழங்கி மேம்படுத்தலுக்கும் உதவினார்.
முகுந்த்தும் ஒரு திரட்டியை தன்னுடைய தளத்தில் நிறுவியிருந்தார். ஆனால் சரியாக அதை வளர்த்து சீராட்டுவதன் தேவையை உணராததாலோ என்னவோ அது பிரபலமாகாமலேயே போய்விட்டது.
வியாழன், ஜூலை 06, 2006
சில முயற்சிகள் சில அனுபவங்கள் -4
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3
நிர்வாகப் பணிக்கு மதி, செல்வராஜ், அன்பு செழியன் ஆகியோர் (பரி பின்னாளில் நிர்வாகத்தில் பங்கெடுத்தார்) முன்வந்தனர். பத்ரி, மீனாக்ஸ், சந்திரவதனா, மதி ஆகியோர் உறுப்பினராக ஒரு ஆலோசனைக்குழுவும் ஏற்படுத்தப்பட்டது. முதல் கட்டப்பணியாக இந்தவார நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து ஏற்பாடு செய்யும் பணி நான்கு வார சுற்றாக நால்வரிடமும் அளிக்கப்பட்டது. அவரவர்க்கு ஒரு புவியியல் களமும் வரையறுக்கப்பட்டது. இதன்மூலம் எந்த வாரத்துக்கு யார் ஏற்பாடு, அல்லது யாரிலிருந்து யார் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்துக்கு அறவே வழியின்றி செய்யப்பட்டது.
மூன்று சுற்றுக்கள் அதாவது 12 வாரங்கள் இந்த ஏற்பாடு தட்டுத்தடுமாறி நடந்தது. இது இனியும் தொடர்ந்தால் 'இந்த வார நட்சத்திரம்' என்ற வடிவத்துக்கே முழுக்குப் போட்டுவிடவேண்டியதுதான் என்னுமளவுக்கு குழு மூலமான செயல்முறை இருந்தது. ஒவ்வொருவருக்கும் பலமுறை நான் நினைவூட்ட வேண்டியிருந்ததிலிருந்து, கடைசி நிமிடத்தில் ஒப்புக்கு சப்பாணியாக ஒருவரை ஏற்பாடு செய்ததுவரை பொறுமையை நன்றாகவே சோதித்தது இந்த முயற்சி. நானே முன்வந்து நட்சத்திரத்துக்கு ஆள்பிடித்துக்கொடுத்ததும் உண்டு! வ.கே.கே/விக்கி இரண்டும் கனவில் வந்து சிரித்தன.
இப்படிச் சொல்வதால் ஆலோசனைக்குழு உறுப்பினர்களை மட்டம் தட்டுவதாய் ஆகாது. அவரவருக்கு ஆயிரம் வேலைகள், முக்கியப் பிரச்னைகள்!
இதற்குள் மதியும் மீண்டும் தான் பொறுப்பேற்கத் தயாராயிருப்பதாய்ச் சொல்லவே, இந்த வார நட்சத்திரத்தை மதி ஒருவரே ஒருங்கிணைப்பதென்று முடிவு செய்தேன். ஒருவிதத்தில் அவர் நடத்தி வந்த 'வலைப்பூ' வாத்தியாரின் ஒன்னொரு வடிவமே இது. எனவே அவரே தொடர்வதே சரியெனப் பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும்மேல் வலைப்பதிவுகள் வந்துவிட்ட நிலையில் இனி வாரம் ஒருவர் என்று முன்னிறுத்துவது சரியாக இருக்குமா என்றும் மனதில் இன்று கேள்வி எழாமல் இல்லை.
இந்த நட்சத்திரமாகட்டும் வலைப்பூ வாத்தியாராகட்டும் நடத்துவதில் உள்ள சிரமம் நடத்தியவர்களுக்கே தெரியும். பலரும் 'இவரைப் போய் ஏன் போட்டார்கள், இன்னும் சிறப்பாக எழுதும் அவரை ஏன் போடவில்லை?' என்றெல்லாம் பேசலாம். ஆனால் உண்மையில் இந்த வாரம் நீங்கள் இருக்கத்தயாரா என்று கேட்டால் பாதிப்பேர் நான் அந்த வாரம் ரொம்ப பிசி என்பார்கள். (இன்று என்னை புனைபெயரில் தாக்கி எழுதும் வலைப்பதிவர்கூட அன்று அவருடைய இன்னொரு புனைபெயரில் தொடர்பு கொண்டபோது நேரமில்லை என்றுதான் சொல்லிவிட்டார்) சிலர் சரி என்று ஒப்புக்கொண்டுவிட்டு கடைசி நிமிடத்தில் ஜகா வாங்குவதும் நடந்திருக்கிறது. இன்னும் சிலர் சரியாக எழுதாமலும் சொதப்பியதும் உண்டு. எதையும் விமர்சிப்பது எளிது செய்வது எத்தனை கடினம் என்பது இந்த அனுபவங்களில் கிடைத்த பாடம்.
நிர்வாகப் பணிக்கு மதி, செல்வராஜ், அன்பு செழியன் ஆகியோர் (பரி பின்னாளில் நிர்வாகத்தில் பங்கெடுத்தார்) முன்வந்தனர். பத்ரி, மீனாக்ஸ், சந்திரவதனா, மதி ஆகியோர் உறுப்பினராக ஒரு ஆலோசனைக்குழுவும் ஏற்படுத்தப்பட்டது. முதல் கட்டப்பணியாக இந்தவார நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து ஏற்பாடு செய்யும் பணி நான்கு வார சுற்றாக நால்வரிடமும் அளிக்கப்பட்டது. அவரவர்க்கு ஒரு புவியியல் களமும் வரையறுக்கப்பட்டது. இதன்மூலம் எந்த வாரத்துக்கு யார் ஏற்பாடு, அல்லது யாரிலிருந்து யார் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்துக்கு அறவே வழியின்றி செய்யப்பட்டது.
மூன்று சுற்றுக்கள் அதாவது 12 வாரங்கள் இந்த ஏற்பாடு தட்டுத்தடுமாறி நடந்தது. இது இனியும் தொடர்ந்தால் 'இந்த வார நட்சத்திரம்' என்ற வடிவத்துக்கே முழுக்குப் போட்டுவிடவேண்டியதுதான் என்னுமளவுக்கு குழு மூலமான செயல்முறை இருந்தது. ஒவ்வொருவருக்கும் பலமுறை நான் நினைவூட்ட வேண்டியிருந்ததிலிருந்து, கடைசி நிமிடத்தில் ஒப்புக்கு சப்பாணியாக ஒருவரை ஏற்பாடு செய்ததுவரை பொறுமையை நன்றாகவே சோதித்தது இந்த முயற்சி. நானே முன்வந்து நட்சத்திரத்துக்கு ஆள்பிடித்துக்கொடுத்ததும் உண்டு! வ.கே.கே/விக்கி இரண்டும் கனவில் வந்து சிரித்தன.
இப்படிச் சொல்வதால் ஆலோசனைக்குழு உறுப்பினர்களை மட்டம் தட்டுவதாய் ஆகாது. அவரவருக்கு ஆயிரம் வேலைகள், முக்கியப் பிரச்னைகள்!
இதற்குள் மதியும் மீண்டும் தான் பொறுப்பேற்கத் தயாராயிருப்பதாய்ச் சொல்லவே, இந்த வார நட்சத்திரத்தை மதி ஒருவரே ஒருங்கிணைப்பதென்று முடிவு செய்தேன். ஒருவிதத்தில் அவர் நடத்தி வந்த 'வலைப்பூ' வாத்தியாரின் ஒன்னொரு வடிவமே இது. எனவே அவரே தொடர்வதே சரியெனப் பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும்மேல் வலைப்பதிவுகள் வந்துவிட்ட நிலையில் இனி வாரம் ஒருவர் என்று முன்னிறுத்துவது சரியாக இருக்குமா என்றும் மனதில் இன்று கேள்வி எழாமல் இல்லை.
இந்த நட்சத்திரமாகட்டும் வலைப்பூ வாத்தியாராகட்டும் நடத்துவதில் உள்ள சிரமம் நடத்தியவர்களுக்கே தெரியும். பலரும் 'இவரைப் போய் ஏன் போட்டார்கள், இன்னும் சிறப்பாக எழுதும் அவரை ஏன் போடவில்லை?' என்றெல்லாம் பேசலாம். ஆனால் உண்மையில் இந்த வாரம் நீங்கள் இருக்கத்தயாரா என்று கேட்டால் பாதிப்பேர் நான் அந்த வாரம் ரொம்ப பிசி என்பார்கள். (இன்று என்னை புனைபெயரில் தாக்கி எழுதும் வலைப்பதிவர்கூட அன்று அவருடைய இன்னொரு புனைபெயரில் தொடர்பு கொண்டபோது நேரமில்லை என்றுதான் சொல்லிவிட்டார்) சிலர் சரி என்று ஒப்புக்கொண்டுவிட்டு கடைசி நிமிடத்தில் ஜகா வாங்குவதும் நடந்திருக்கிறது. இன்னும் சிலர் சரியாக எழுதாமலும் சொதப்பியதும் உண்டு. எதையும் விமர்சிப்பது எளிது செய்வது எத்தனை கடினம் என்பது இந்த அனுபவங்களில் கிடைத்த பாடம்.
-தொடரும்
சில முயற்சிகள் சில அனுபவங்கள் -3
பாகம் 1 | பாகம் 2
விடுப்பு முடிந்து அமெரிக்கா திரும்பியும், மனம் வலைப்பதிவுகளில் எழுதுவதை விட இந்த 'தளம்' அமைக்கும் விருப்பத்திலேயே லயித்து இருந்தது. எனவே உள்ளூர் பார்டர்ஸ் புத்தகக்கடையில் php/mysql புத்தகம் வாங்கி உடனே முயற்சியைத் தொடங்கினேன்.
முதலில் தானே தகவல்களைச் சேர்க்கும் பட்டியல் ஒன்றைத் தயாரித்தேன். அதை சோதித்து ஆலோசனை வழங்கியவர்களில் நண்பர்கள் செல்வராஜ், பாஸ்டன் பாலா, சத்யராஜ்குமார் ஆகியோர் முக்கியமானவர்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி திரட்டியையும் சேர்த்து ஆகஸ்ட் 23, 2004 அன்று வெளியிட்டேன். இடையில் வலைப்பூ ஒருங்கிணைப்புப் பணியை மதியிடமே கொடுத்திருந்தேன். எனவே இதில் முழுமையாக ஈடுபடமுடிந்தது. அந்த 2 மாதங்கள் என் முழு சிந்தனையுமே இதிலேதான் கிடந்தது.
வெளியிடும்போது புது ஆள்களப்பெயரோடு வெளியிட எண்ணி துண்டுபோட்டுவைத்த பெயர்தான் 'நந்தவனம்.காம்'. ஆனால் நானாக வெளியிடும் முன்பே பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் தற்காலிகமாக இயங்கிவந்த 'தமிழ்மணம்.காம்' என்பதையே நிரந்தரமாக்கிவிட்டேன். வெங்கட், பத்ரி, மாலன், கண்ணன் போன்றோரிடம் முன்னதாக அறிவித்து ஆலோசனை கோரினேன். வெங்கட்மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து பல யோசனைகளை சொல்லியிருந்தார். கண்ணனும் மாலனும் வாழ்த்தினார்கள். மாலன் ஒருபடி மேலே போய், திசைகள் இதழில் நல்ல அறிமுகம் கொடுத்தார்.
அத்தோடு நிறுத்தாமல் தொடர்ச்சியாக மே 2005 வரை தமிழ்மணத்தின் ஆற்றல்களையும் வசதிகளையும் மேம்படுத்திகொண்டே இருந்ததால் தமிழ்மணம் பலரும் விரும்பிப் பயன்படுத்தும் ஒரு வசதியாகிப்போனது. 'இந்த இணைய இதழில் எழுதுகிறேன்' என்பதுபோல 'தமிழ்மணத்தில் எழுதுகிறேன்' என்று சொல்லுமளவுக்குத் தமிழ்மணமும் தமிழ்வலைப்பதிவுலகமும் ஒன்றாகிப் போனது. இதனால் பெருமை இருந்தாலும் பல சிக்கல்களும் இருந்தன. ப்ளாக்கர்.காம்க்கும் தமிழ்மணத்துக்கும் கூட வேறுபாடு தெரியாதவர்களும் இருந்தார்கள்.
தொடங்கியபோது தமிழ்மணத்தில் இருந்த வசதிகள் இரண்டே தான்:
பிறகு பல்வேறு கட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான மேம்பாடுகள்:
தமிழ்மணம் தொடங்கிய சில வாரங்களில் மதியிடமிருந்து, தான் சில மாதங்கள் தீவிர இணையச் செயல்பாட்டிருந்து விலகியிருக்க நேர்ந்திருப்பதாயும் அதனால் 'மீண்டும் வலைப்பூவை ஒருங்கிணைக்க முடியுமா?' என்ற வேண்டுகோள் வந்தது. அப்போது உதயமானதுதான் 'இந்த வார நட்சத்திர' யோசனை. அதே சமயத்தில் இதுவரை முழுக்க முழுக்க தனியொருவனாக நடத்திவந்த தமிழ்மணத்தில் ஆலோசனைக்கும், நிர்வாகத்துக்கும் வலைப்பதிவு நண்பர்கள் சிலரைத் துணைக்கொண்டு தமிழ்மணப் பணியைப் பரவலாக்கவும் யோசனை வந்தது.
விடுப்பு முடிந்து அமெரிக்கா திரும்பியும், மனம் வலைப்பதிவுகளில் எழுதுவதை விட இந்த 'தளம்' அமைக்கும் விருப்பத்திலேயே லயித்து இருந்தது. எனவே உள்ளூர் பார்டர்ஸ் புத்தகக்கடையில் php/mysql புத்தகம் வாங்கி உடனே முயற்சியைத் தொடங்கினேன்.
முதலில் தானே தகவல்களைச் சேர்க்கும் பட்டியல் ஒன்றைத் தயாரித்தேன். அதை சோதித்து ஆலோசனை வழங்கியவர்களில் நண்பர்கள் செல்வராஜ், பாஸ்டன் பாலா, சத்யராஜ்குமார் ஆகியோர் முக்கியமானவர்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி திரட்டியையும் சேர்த்து ஆகஸ்ட் 23, 2004 அன்று வெளியிட்டேன். இடையில் வலைப்பூ ஒருங்கிணைப்புப் பணியை மதியிடமே கொடுத்திருந்தேன். எனவே இதில் முழுமையாக ஈடுபடமுடிந்தது. அந்த 2 மாதங்கள் என் முழு சிந்தனையுமே இதிலேதான் கிடந்தது.
வெளியிடும்போது புது ஆள்களப்பெயரோடு வெளியிட எண்ணி துண்டுபோட்டுவைத்த பெயர்தான் 'நந்தவனம்.காம்'. ஆனால் நானாக வெளியிடும் முன்பே பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் தற்காலிகமாக இயங்கிவந்த 'தமிழ்மணம்.காம்' என்பதையே நிரந்தரமாக்கிவிட்டேன். வெங்கட், பத்ரி, மாலன், கண்ணன் போன்றோரிடம் முன்னதாக அறிவித்து ஆலோசனை கோரினேன். வெங்கட்மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து பல யோசனைகளை சொல்லியிருந்தார். கண்ணனும் மாலனும் வாழ்த்தினார்கள். மாலன் ஒருபடி மேலே போய், திசைகள் இதழில் நல்ல அறிமுகம் கொடுத்தார்.
அத்தோடு நிறுத்தாமல் தொடர்ச்சியாக மே 2005 வரை தமிழ்மணத்தின் ஆற்றல்களையும் வசதிகளையும் மேம்படுத்திகொண்டே இருந்ததால் தமிழ்மணம் பலரும் விரும்பிப் பயன்படுத்தும் ஒரு வசதியாகிப்போனது. 'இந்த இணைய இதழில் எழுதுகிறேன்' என்பதுபோல 'தமிழ்மணத்தில் எழுதுகிறேன்' என்று சொல்லுமளவுக்குத் தமிழ்மணமும் தமிழ்வலைப்பதிவுலகமும் ஒன்றாகிப் போனது. இதனால் பெருமை இருந்தாலும் பல சிக்கல்களும் இருந்தன. ப்ளாக்கர்.காம்க்கும் தமிழ்மணத்துக்கும் கூட வேறுபாடு தெரியாதவர்களும் இருந்தார்கள்.
தொடங்கியபோது தமிழ்மணத்தில் இருந்த வசதிகள் இரண்டே தான்:
- தொடங்கிய தேதி, வலைப்பதிவர் பெயர், வசிக்கும் கண்டம் வாரியாக அடுக்கப்பட்ட வலைப்பதிவர் பட்டியல
- கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எழுதப்பட்ட இடுகைகள் (15 நிமிடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டது)
பிறகு பல்வேறு கட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான மேம்பாடுகள்:
- கருத்துக்களம் சார்ந்த பதிவுகள் பகுதி
- சென்ற நாட்களில் எழுதப்பட்டவை
- மறுமொழி நிலவரம் காட்டுதல்.
- இடுகைகளில் தேடுதல்
- வாசகர் பரிந்துரை வசதி
- பிடிஎஃப் மென்னூலாக்கும் வசதி.
- ஆங்கில இடுகைகளை தானாக மறைக்கும் வசதி.
- இடுகைகளின்மேல் ஆட்சேபம் தெரிவிக்கும் வசதி.
தமிழ்மணம் தொடங்கிய சில வாரங்களில் மதியிடமிருந்து, தான் சில மாதங்கள் தீவிர இணையச் செயல்பாட்டிருந்து விலகியிருக்க நேர்ந்திருப்பதாயும் அதனால் 'மீண்டும் வலைப்பூவை ஒருங்கிணைக்க முடியுமா?' என்ற வேண்டுகோள் வந்தது. அப்போது உதயமானதுதான் 'இந்த வார நட்சத்திர' யோசனை. அதே சமயத்தில் இதுவரை முழுக்க முழுக்க தனியொருவனாக நடத்திவந்த தமிழ்மணத்தில் ஆலோசனைக்கும், நிர்வாகத்துக்கும் வலைப்பதிவு நண்பர்கள் சிலரைத் துணைக்கொண்டு தமிழ்மணப் பணியைப் பரவலாக்கவும் யோசனை வந்தது.
-தொடர்ந்து வரும்.
சில முயற்சிகள் சில அனுபவங்கள் -2
பாகம் 1
சில மாதங்களுக்கு முன்புதான் கண்ணனிடம் 'ஹெச்டிஎம்எல் டேக் என்றால் என்ன' என்று கேட்டவன், 'டெம்ப்ளேட்டை எப்படி மாற்றலாம், டைனமிக் ஃபான்ட் எப்படிப் போடுவது', என்று தேடியவன், ஒவ்வொன்றாய்க் கற்றுக்கொண்டு, வலைப்பதிவையே அப்போதுதான் புரிந்துகொண்டிருந்தேன். ஆனால் அதற்கும் மேலாக இணைய வழங்கி(web server), தரவுத்தளம்(database), வழங்கிப்பக்க நிரலி(server-side scripting) என்று பல புது நுட்பங்கள் மிரட்டின. எப்படியோ விழுந்து எழுந்து, நியூக்ளியஸ் பொதியின் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பு வெளியாக என் பங்களிப்பை அளித்தேன். தமிழாக்கம் வெறும் மொழிக்கோப்பை தமிழாக்கம் செய்வதில் மட்டும் இல்லை. மேலும் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இந்த முயற்சியில் என் அனுபவங்களை பின்னாளில் உத்தமம் மின்மஞ்சரி சஞ்சிகையில் ஒரு கட்டுரையாக எழுதினேன்.
இந்த நியூக்ளியஸ் தமிழாக்க முயற்சிகளுக்கான சோதனைக்களமாக எனக்கு ஒரு இணைய வழங்கிச் சேவை தேவைப்பட்டது. 1and1.com என்ற சேவை நிறுவனம் இலவசமாக அளித்த வழங்கியின்மூலமே இது சாத்தியப்பட்டது. சேவையை தனித்துவமிக்க ஒரு ஆள்களப்பெயருடன் (damain name) பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று யோசித்ததன் விளைவே 'தமிழ்மணம்' என்ற பெயர். தமிழ் வலைப்பூ மணம் வீசும் இடம் என்ற பொருளில் வைத்ததுதான் இந்தப் பெயர். ஆனால் இன்று இருக்கும் வலைத்திரட்டிக்காக யோசித்த பெயரில்லை. இந்த ஆள்களப்பெயருடன் http://kasi.thamizmanam.com/ என்ற வலைமுகவரியில் நியூக்ளியஸால் இயங்கும் என் வலைப்பதிவு 2004 ஜனவரி முதல் நடப்புக்கு வந்தது.
இ-சங்கமம் என்ற இணைய இதழ் ஆசிரியர் ஆல்பர்ட் வலைப்பதிவு பற்றி தொடர் எழுதுமாறு நா. கண்ணனைக் கேட்டுக்கொள்ள, அவர் என்னைச் சுட்டிக்காட்டி 'இவர் எழுதினால் நன்றாக இருக்கும்' என்றிருக்கிறார். அப்படித்தான் அதில் ஒரு தொடராக 'தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள்' வந்தது.
வ.கே.கே. முழு வெற்றியடையாத்தால், தமிழ் வலைப்பதிவு விக்கி ஒன்றைக் கட்டலாம் என்று வெங்கட்ரமணன் முன்வந்து தன் தளத்தில் ஒரு விக்கியை நிறுவிக்கொடுத்தார். யூனிகோடு ஆதரவு இன்மை, சமூக ஆர்வமின்மை போன்ற காரணங்களால் இதுவும் எதிர்பார்த்த அளவில் வளரவில்லை. பிறகு அந்த விக்கியும் ஆள்களப்பெயர் சிக்கலால் இழக்கப்பட்டுவிட்டது.
நியூக்ளியஸ் பொதி இயங்கும் அடிப்படை நுட்பத்தை அறிந்த போது, இதே நுட்பங்களைக் கொண்டு வேறு என்ன செய்யமுடியும் என்று சிந்தித்தேன். இடையில் மதியின் வேண்டுகோளுக்கிணங்க மதி ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த, வாரம் ஒருவர் ஆசிரியராக இருக்கும், 'வலைப்பூ' என்ற வலைப்பதிவை ஒருங்கிணைக்கும் கூடுதல் பணியும் ஏற்றுக்கொண்டேன். அத்துடன் 'வலைப்பதிவர் பட்டியலை' நிர்வகிக்கும் பொறுப்பும் வந்தது. அப்போதுதான் செய்தியோடை நுட்பம் ஓரளவுக்கு பரவலான பயன்பாட்டுக்கு வந்திருந்தது.
பட்டியல்-நியூக்ளியஸ்-வலைப்பூ-செய்தியோடை என்ற இந்த சூழலே என்னை ஒரு புதுமையான வலைப்பதிவு தளத்தை வடிவமைக்கத் தூண்டியது. இன்று தமிழ்மணத்தில் பார்க்கும் பெரும்பாலான அம்சங்களும் அன்றே யோசித்திருந்தவையே. அவற்றைப் பட்டியலிட்டு சக வலைப்பூ ஒருங்கிணைப்பாளரான மதியுடனும், இன்னொரு நுட்பவியலாளரான சுரதாவுடனும் பகிர்ந்துகொண்டேன். ஆனால் இந்த முயற்சிகளில் ஈடுபடத்தேவையான php/mysql நுட்பத்தில் அவர்கள் பணியாற்றவோ, ஈடுபடவோ இல்லாததால், அவர்கள் செய்யவாய்ப்பில்லையென்றும் அறிந்தேன். கூட்டுமுயற்சிகளின் வெற்றி வாய்ப்பையும் ஏற்கனவே வ.கே.கே./விக்கி அனுபவங்களால் அறிந்திருந்ததால், செய்தால் தனியாகத்தான் செய்வது என்று முடிவு செய்தேன். அத்துடன் 2004 கோடை விடுமுறைக்கு இந்தியா வருவதைமுன்னிட்டு வாரக்கணக்கில் விடுப்பும் எடுத்து வலைப்பதிவுகளிலிருந்து சற்று விலகியிருந்தேன்.
சில மாதங்களுக்கு முன்புதான் கண்ணனிடம் 'ஹெச்டிஎம்எல் டேக் என்றால் என்ன' என்று கேட்டவன், 'டெம்ப்ளேட்டை எப்படி மாற்றலாம், டைனமிக் ஃபான்ட் எப்படிப் போடுவது', என்று தேடியவன், ஒவ்வொன்றாய்க் கற்றுக்கொண்டு, வலைப்பதிவையே அப்போதுதான் புரிந்துகொண்டிருந்தேன். ஆனால் அதற்கும் மேலாக இணைய வழங்கி(web server), தரவுத்தளம்(database), வழங்கிப்பக்க நிரலி(server-side scripting) என்று பல புது நுட்பங்கள் மிரட்டின. எப்படியோ விழுந்து எழுந்து, நியூக்ளியஸ் பொதியின் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பு வெளியாக என் பங்களிப்பை அளித்தேன். தமிழாக்கம் வெறும் மொழிக்கோப்பை தமிழாக்கம் செய்வதில் மட்டும் இல்லை. மேலும் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இந்த முயற்சியில் என் அனுபவங்களை பின்னாளில் உத்தமம் மின்மஞ்சரி சஞ்சிகையில் ஒரு கட்டுரையாக எழுதினேன்.
இந்த நியூக்ளியஸ் தமிழாக்க முயற்சிகளுக்கான சோதனைக்களமாக எனக்கு ஒரு இணைய வழங்கிச் சேவை தேவைப்பட்டது. 1and1.com என்ற சேவை நிறுவனம் இலவசமாக அளித்த வழங்கியின்மூலமே இது சாத்தியப்பட்டது. சேவையை தனித்துவமிக்க ஒரு ஆள்களப்பெயருடன் (damain name) பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று யோசித்ததன் விளைவே 'தமிழ்மணம்' என்ற பெயர். தமிழ் வலைப்பூ மணம் வீசும் இடம் என்ற பொருளில் வைத்ததுதான் இந்தப் பெயர். ஆனால் இன்று இருக்கும் வலைத்திரட்டிக்காக யோசித்த பெயரில்லை. இந்த ஆள்களப்பெயருடன் http://kasi.thamizmanam.com/ என்ற வலைமுகவரியில் நியூக்ளியஸால் இயங்கும் என் வலைப்பதிவு 2004 ஜனவரி முதல் நடப்புக்கு வந்தது.
இ-சங்கமம் என்ற இணைய இதழ் ஆசிரியர் ஆல்பர்ட் வலைப்பதிவு பற்றி தொடர் எழுதுமாறு நா. கண்ணனைக் கேட்டுக்கொள்ள, அவர் என்னைச் சுட்டிக்காட்டி 'இவர் எழுதினால் நன்றாக இருக்கும்' என்றிருக்கிறார். அப்படித்தான் அதில் ஒரு தொடராக 'தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள்' வந்தது.
வ.கே.கே. முழு வெற்றியடையாத்தால், தமிழ் வலைப்பதிவு விக்கி ஒன்றைக் கட்டலாம் என்று வெங்கட்ரமணன் முன்வந்து தன் தளத்தில் ஒரு விக்கியை நிறுவிக்கொடுத்தார். யூனிகோடு ஆதரவு இன்மை, சமூக ஆர்வமின்மை போன்ற காரணங்களால் இதுவும் எதிர்பார்த்த அளவில் வளரவில்லை. பிறகு அந்த விக்கியும் ஆள்களப்பெயர் சிக்கலால் இழக்கப்பட்டுவிட்டது.
நியூக்ளியஸ் பொதி இயங்கும் அடிப்படை நுட்பத்தை அறிந்த போது, இதே நுட்பங்களைக் கொண்டு வேறு என்ன செய்யமுடியும் என்று சிந்தித்தேன். இடையில் மதியின் வேண்டுகோளுக்கிணங்க மதி ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த, வாரம் ஒருவர் ஆசிரியராக இருக்கும், 'வலைப்பூ' என்ற வலைப்பதிவை ஒருங்கிணைக்கும் கூடுதல் பணியும் ஏற்றுக்கொண்டேன். அத்துடன் 'வலைப்பதிவர் பட்டியலை' நிர்வகிக்கும் பொறுப்பும் வந்தது. அப்போதுதான் செய்தியோடை நுட்பம் ஓரளவுக்கு பரவலான பயன்பாட்டுக்கு வந்திருந்தது.
பட்டியல்-நியூக்ளியஸ்-வலைப்பூ-செய்தியோடை என்ற இந்த சூழலே என்னை ஒரு புதுமையான வலைப்பதிவு தளத்தை வடிவமைக்கத் தூண்டியது. இன்று தமிழ்மணத்தில் பார்க்கும் பெரும்பாலான அம்சங்களும் அன்றே யோசித்திருந்தவையே. அவற்றைப் பட்டியலிட்டு சக வலைப்பூ ஒருங்கிணைப்பாளரான மதியுடனும், இன்னொரு நுட்பவியலாளரான சுரதாவுடனும் பகிர்ந்துகொண்டேன். ஆனால் இந்த முயற்சிகளில் ஈடுபடத்தேவையான php/mysql நுட்பத்தில் அவர்கள் பணியாற்றவோ, ஈடுபடவோ இல்லாததால், அவர்கள் செய்யவாய்ப்பில்லையென்றும் அறிந்தேன். கூட்டுமுயற்சிகளின் வெற்றி வாய்ப்பையும் ஏற்கனவே வ.கே.கே./விக்கி அனுபவங்களால் அறிந்திருந்ததால், செய்தால் தனியாகத்தான் செய்வது என்று முடிவு செய்தேன். அத்துடன் 2004 கோடை விடுமுறைக்கு இந்தியா வருவதைமுன்னிட்டு வாரக்கணக்கில் விடுப்பும் எடுத்து வலைப்பதிவுகளிலிருந்து சற்று விலகியிருந்தேன்.
சில முயற்சிகள் சில அனுபவங்கள் -1
தமிழ் இணைய உலகில் என் அனுபவம் சுமார் 3 ஆண்டுகளே. அதற்குள் பல அனுபவங்கள். என் பணி சூழலால் இணையத்துடனான என் தொடர்பு சென்ற மாதங்களில் குறைந்துகொண்டே வருகிறது. எனவே என் அனுபவங்களை சுருக்கமாகவேனும் ஓரிடத்தில் எழுதி வைப்போம் என்று தோன்றியது. அதன் விளைவே இந்தக் குறுந்தொடர். வாழ்க்கை அனுபவங்கள் பற்றிய தொடர் வாசிக்க ஆர்வமுள்ளவர்களை பழைய 'சில விளக்குகள் சில வழிகாட்டிகள்'-க்கு அழைக்கிறேன்.
வலைப்பதிவுகள் வட்டத்தில் முதலில் இயங்கியவர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே இணையக்குழுமங்கள், சஞ்சிகைகள் வாயிலாக இணையத்தில் தமிழின் போக்கை அறிந்தவர்களாக இருந்தார்கள். என்னைப்போன்ற சிலரே நேரடியாக வலைப்பதிவுக்கு வந்தவர்களாக இருந்தார்கள். வலைப்பதிவுகள் தந்த சுதந்திரம் + நுட்பநீதியான சாத்தியங்கள், இவையே என்னை இந்த வடிவத்தின்பால் ஈர்த்த காரணிகள்.
நண்பர் ஒருவர் ஹரேகிருஷ்ணா இயக்கத்தில் ஈடுபட்டு பல கருத்துக்களையும் என்னுடன் கலந்துரையாடியபோது வைணவக் கருத்துக்களின் ஊற்றுக்கண் தேடி அதன்மூலம் இணையத்தில் தமிழ் வழியாகக் கிடைத்த ஆழ்வார்களின் அறிமுகம், நா.கண்ணனின் குடில்...அங்கிருந்து அவரின் 'வலைப்பூ'... என்று என் வலைத்தமிழ்ப் பயணம் இருந்தது. கண்ணனின் தொடர்ச்சியான வாசகனானேன். அப்போது மதி கந்தசாமி/சுரதா தொகுத்திருந்த வலைப்பதிவுகளுக்கான உதவிப்பக்கங்கள், பட்டியல் போன்றவையும் அறிமுகமாயின. 2003 ஆகஸ்ட் மாத திசைகள் இதழ் வலைப்பதிவுகளை முன்வைத்து வெளியானது. மாலன் அவர்கள் வலைப்பதிவுகளின் சாத்தியங்களைப் புரிந்து அவற்றுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தார். அது என்னையும் வலைப்பதிக்கத் தூண்டுவதாக இருந்தது. ஒரு கணப்பொழுதில் எடுத்த முடிவால் வலைப்பதிவனானேன். ரிடிஃப் சேவையில் சில நாள் உழன்றுவிட்டு ப்ளாக்கர் சேவையில் ஐக்கியமானேன்.
தொழில்நுட்ப அம்சங்களின்பால் எனக்கு இருந்த இயற்கையான ஈடுபாடு, புத்துருவாக்கலில்(Innovation) எனக்கு இருப்பதாக நான் நம்பிய திறமை இவை இரண்டும் என்னை ஒரு சாதாரண வலைப்பதிவனாக இருக்க விடவில்லை.
மதியின் முயற்சியினாலான அங்கும் இங்குமான சில உதவிப்பக்கங்களின் நீட்சியாக ஒரு முழுமையான உதவிப்பக்கங்களின் தொகுப்பு, 'வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகள்' என்ற வடிவில் கூட்டுமுயற்சியாகச் செய்யலாம் என்று யோசனை பலராலும் முன்வைக்கப்பட்டபோது, 'மூத்த' பதிவர் எவரும் முன்வராததால் நான் இந்தக் கூட்டுமுயற்சிக்கு ஒருங்கிணைப்பாளனாக இருக்கத் தலைப்பட்டேன். இன்று என்னோடு தமிழ்மண நிர்வாகத்தில் தோள்கொடுக்கும் மதி, செல்வராஜ் ஆகியோருடன், பரிமேலழகர், சுரதா, வினோபா ஆகியோரும் பங்களிக்க சில பக்கங்கள் தொகுக்கப்பட்டன, ஆனாலும் இந்த முயற்சி முழு வெற்றியடையவில்லை. ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்ட குறிப்புகளை தமிழ்ப்படுத்த தான் தயார் என்று பத்ரி சேஷாத்ரி சொல்லியிருந்தார். இந்த முயற்சிகள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
இடையில் தமிழா மென்பொருளாளர் குழுவின் முகுந்தராஜ் நியூக்ளியஸ்சிஎம்எஸ் என்ற திறமூல நிரல்பொதியை (open source software package) சுட்டிக் காட்டி, அதன் மொழிக்கோப்பைத் தமிழாக்கம் செய்ய 'யார் முன்வருகிறார்கள்?' என்று கேட்டார். உடனே யாரும் முன்வராததால் அங்கும் 'நான் செய்கிறேன்' என்று முயன்றேன். க்ருபாஷங்கர் தானும் ஆர்வமாக இருப்பதாகவும், நான் செய்வதால் தான் ஒதுங்கிக்கொள்வதாகவும் சொன்னார். இப்படி தமிழ்மணம்.காம் தளம் உருவாவதற்கான முதல் விதையை ஊன்றியவர் முகுந்தராஜ் என்றே சொல்லலாம்.
வலைப்பதிவுகள் வட்டத்தில் முதலில் இயங்கியவர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே இணையக்குழுமங்கள், சஞ்சிகைகள் வாயிலாக இணையத்தில் தமிழின் போக்கை அறிந்தவர்களாக இருந்தார்கள். என்னைப்போன்ற சிலரே நேரடியாக வலைப்பதிவுக்கு வந்தவர்களாக இருந்தார்கள். வலைப்பதிவுகள் தந்த சுதந்திரம் + நுட்பநீதியான சாத்தியங்கள், இவையே என்னை இந்த வடிவத்தின்பால் ஈர்த்த காரணிகள்.
நண்பர் ஒருவர் ஹரேகிருஷ்ணா இயக்கத்தில் ஈடுபட்டு பல கருத்துக்களையும் என்னுடன் கலந்துரையாடியபோது வைணவக் கருத்துக்களின் ஊற்றுக்கண் தேடி அதன்மூலம் இணையத்தில் தமிழ் வழியாகக் கிடைத்த ஆழ்வார்களின் அறிமுகம், நா.கண்ணனின் குடில்...அங்கிருந்து அவரின் 'வலைப்பூ'... என்று என் வலைத்தமிழ்ப் பயணம் இருந்தது. கண்ணனின் தொடர்ச்சியான வாசகனானேன். அப்போது மதி கந்தசாமி/சுரதா தொகுத்திருந்த வலைப்பதிவுகளுக்கான உதவிப்பக்கங்கள், பட்டியல் போன்றவையும் அறிமுகமாயின. 2003 ஆகஸ்ட் மாத திசைகள் இதழ் வலைப்பதிவுகளை முன்வைத்து வெளியானது. மாலன் அவர்கள் வலைப்பதிவுகளின் சாத்தியங்களைப் புரிந்து அவற்றுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தார். அது என்னையும் வலைப்பதிக்கத் தூண்டுவதாக இருந்தது. ஒரு கணப்பொழுதில் எடுத்த முடிவால் வலைப்பதிவனானேன். ரிடிஃப் சேவையில் சில நாள் உழன்றுவிட்டு ப்ளாக்கர் சேவையில் ஐக்கியமானேன்.
தொழில்நுட்ப அம்சங்களின்பால் எனக்கு இருந்த இயற்கையான ஈடுபாடு, புத்துருவாக்கலில்(Innovation) எனக்கு இருப்பதாக நான் நம்பிய திறமை இவை இரண்டும் என்னை ஒரு சாதாரண வலைப்பதிவனாக இருக்க விடவில்லை.
மதியின் முயற்சியினாலான அங்கும் இங்குமான சில உதவிப்பக்கங்களின் நீட்சியாக ஒரு முழுமையான உதவிப்பக்கங்களின் தொகுப்பு, 'வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகள்' என்ற வடிவில் கூட்டுமுயற்சியாகச் செய்யலாம் என்று யோசனை பலராலும் முன்வைக்கப்பட்டபோது, 'மூத்த' பதிவர் எவரும் முன்வராததால் நான் இந்தக் கூட்டுமுயற்சிக்கு ஒருங்கிணைப்பாளனாக இருக்கத் தலைப்பட்டேன். இன்று என்னோடு தமிழ்மண நிர்வாகத்தில் தோள்கொடுக்கும் மதி, செல்வராஜ் ஆகியோருடன், பரிமேலழகர், சுரதா, வினோபா ஆகியோரும் பங்களிக்க சில பக்கங்கள் தொகுக்கப்பட்டன, ஆனாலும் இந்த முயற்சி முழு வெற்றியடையவில்லை. ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்ட குறிப்புகளை தமிழ்ப்படுத்த தான் தயார் என்று பத்ரி சேஷாத்ரி சொல்லியிருந்தார். இந்த முயற்சிகள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
இடையில் தமிழா மென்பொருளாளர் குழுவின் முகுந்தராஜ் நியூக்ளியஸ்சிஎம்எஸ் என்ற திறமூல நிரல்பொதியை (open source software package) சுட்டிக் காட்டி, அதன் மொழிக்கோப்பைத் தமிழாக்கம் செய்ய 'யார் முன்வருகிறார்கள்?' என்று கேட்டார். உடனே யாரும் முன்வராததால் அங்கும் 'நான் செய்கிறேன்' என்று முயன்றேன். க்ருபாஷங்கர் தானும் ஆர்வமாக இருப்பதாகவும், நான் செய்வதால் தான் ஒதுங்கிக்கொள்வதாகவும் சொன்னார். இப்படி தமிழ்மணம்.காம் தளம் உருவாவதற்கான முதல் விதையை ஊன்றியவர் முகுந்தராஜ் என்றே சொல்லலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
இணையத்திலே தமிழ் வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்மணம் சேவையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு வாழ்த்துகள் . என்னடா இது சோதனை , வலை...
-
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...