ஞாயிறு, டிசம்பர் 23, 2007

அறிவுக்களஞ்சியம் விருது 2008

நண்பர் முனைவர் சேயோனிடமிருந்து வந்த மடல்:

எம்.டி.எஸ். அகடெமி
எண் 4, கிழக்கு மாட வீதி,
மைலாப்பூர்,
சென்னை - 600 004
தொலைபேசி: 044-24951415 செல்பேசி: 9444991415
மின்னஞ்சல்: mtsacademy@yahoo.co.in


அறிவுக்களஞ்சியம் விருது 2008 - இளைஞருக்கான போட்டிகள்

தேசிய இளைஞர் நாளாக அனுசரிக்கப்படும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு எம்.டி.எஸ். அகடெமி, நேரு யுவ கேந்திரா, இந்திய அரசின் இளைஞர் விவகாரம் & விளையாட்டு அமைச்சகம், சென்னைப் பல்கலைக் கழகத்தின் தேசிய சேவைத் திட்டம் ஆகியோர் இணைந்து அறிவுக்களஞ்சியம் விருது 2008 - இளைஞருக்கான போட்டிகளை நடத்துகின்றனர். 16 வயது முதல் 30 வரையிலான இந்தப் போட்டிகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரும் ஜனவரி 5-ஆம் நாள் சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் நடைபெறும்.

உத்தேசமாக 10 விருதுகள் கீழ்க்கண்ட பிரிவுகளில் அளிக்கப்படவிருக்கின்றன.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் பேச்சுப்போட்டி (3 போட்டிகள்)
(தலைப்பு: இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் செய்தி)

தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் கட்டுரைப்போட்டி (3 போட்டிகள்)
(தலைப்பு: திருவள்ளுவர் வலியுறுத்தும் வாழ்வியல் நெறிகள்)

தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் கவிதைப்போட்டி (3 போட்டிகள்)
(தலைப்பு: மானுடம் போற்றும் மகாத்மா காந்தி)

இசைப்போட்டி (1 போட்டி)
(தலைப்பு:திருக்குறள், திருவள்ளுவர், விவேகானந்தர், மகாத்மா காந்தி பற்றிய பாடல்கள்)

முதல் பரிசு: ருபாய் 2000/- மதிப்புள்ள அறிவு மலர் விருது
இரண்டாம் பரிசு: ருபாய் 1500/- மதிப்புள்ள அறிவுக்கதிர் விருது
மூன்றாம் பரிசு: ருபாய் 1000/- மதிப்புள்ள அறிவுத்தளிர் விருது
நான்காம் பரிசு பரிசு: ருபாய் 700/- மதிப்புள்ள அறிவுத்துளிர் விருது
ஐந்தாம் பரிசு: ருபாய் 500/- மதிப்புள்ள அறிவுப்புதிர் விருது

மேற்குறிப்பிட்ட எல்லாப் (பத்து) போட்டிகளிலும் பங்கேற்று மிக அதிக தரமதிப்பெண் பெறும் இளைஞருக்கு ரூபாய் 3000/- மதிப்புள்ள அறிவுக்களஞ்சியம் விருது 2008 வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் பதிவுக் கட்டணமாக ஒரு போட்டிக்கு ரூபாய் 10/- செலுத்தி மேற்கண்ட முகவரியில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

அனைவரின் பங்கேற்பையும் ஆதரவையும் வேண்டி,
-முனைவர். சேயோன்,
கௌரவ செயலாளர்.

2 கருத்துகள்:

சுந்தரவடிவேல் சொன்னது…

தலைப்பைப் பாத்துட்டு, நீங்கதான் யாருக்கோ குடுக்கப் போறீங்கன்னு நெனச்சேன் :))

துளசி கோபால் சொன்னது…

நானும் சுந்தரவடிவேல் சொன்னதுபோலதான் நினைச்சேன்:-)

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...