இன்று வெங்கட்டின் வலைக்குறிப்புகளில் கிடைத்த ஒரு தொடுப்பு சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' பகுதிக்கு இட்டுப்போனது. தமிழ்லினக்ஸ் பற்றி சுஜாதா மீது வெங்கட் வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி என்னால் கருத்து எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியவில்லை. ஆனால் சுஜாதாவின் மீது என் தனிப்பட்ட அபிப்ராயம் அவரின் நிஜம் நீதிக்கதைகள் படித்தபின் கொஞ்சம் குறைந்துபோனது உண்மை (என் அபிப்ராயம் அவரை என்ன செய்யப்போகிறது?) ஆனால் இன்று அவர் க.பெ. பகுதியில் திருக்குறளைப்பற்றி பலரும் சிலாகித்துச் சொல்லுவதை (மீண்டும்) கிண்டல் செய்திருந்தார். அவர் சொன்னது பெரும்பாலும் உண்மை. எந்த ஒரு நூலும் உலகத்தில் உள்ள எல்லா அறிவுகளையும் தன்னுள் கொண்டிருக்கமுடியும் என்று நினைக்கும் ஒருவர் ஒரு கிணற்றுத்தவளைக்கு ஒப்பாவார். அன்று என் கிருஷ்ணபக்த நண்பர், 'கீதையில் இல்லாத விஷயங்களே உலகில் இல்லை' என்று சொன்னபோதும் இதையேதான் நினைத்துக் கொண்டேன். எவ்வளவு எளிதில் நாம் நம்மையே ஒரு எல்லைக்குள் பூட்டிக்கொள்கிறோம்; பின் 'நம் கருத்தே சரி'யென்று வாதிடவும் துணிகிறோம்! கைனகாலஜியிலிருந்து, ஜெனடிக்ஸ், திரைப்படத் தயாரிப்பு என்று எல்லா நுட்பவியலும் திருக்குறளில் தேடுவது மடமை.
மற்ற நுட்பவியல்கள் வளர்ந்துகொண்டே இருப்பவை. சொல்லப்போனால் ஒவ்வொரு இயல்களில் புதுக்கருத்துகள் மட்டுமன்றி, அவ்வப்போது புதுப்புது 'இயல்'களே தோன்றுவதையும் பார்க்கிறோம். பொறியியல் என்பது இன்று கிளை கிளையாய்ப் பிரிந்து எத்தனை வகை இருக்கிறதென்று அறிவோம். இந்தப் பொறியியலே ஒரு கலையாகக் கருதப்பட்டது ஒரு காலம். இன்னும் மாணிக்கவாசகம் பிள்ளையின் பொறியியல் பட்டப்படிப்புகான கணிதப் புத்தகத்தில் பார்த்தால் பி.ஏ.(எஞ்சினீரிங்) என்று ஒரு பட்டப்படிப்பு இருந்திருப்பது தெரிய வரும். பிறகு இது ஒரு கலை அல்ல என்று உணர்ந்து, பி.எஸ்.சி.(எஞ்சினீரிங்) வந்திருக்கிறது. பிறகு இது விஞ்ஞானமும் அல்ல என்று உணர்ந்து பி.இ. என்று வந்தது... இப்படியே விரிந்து கொண்டிருப்பது இந்த அறிவுசார் கல்வி. ஓரளவுக்கு 'எல்லா'த்துறைகளிலும் வீச்சுக் கொண்ட கலைக்களஞ்சியங்களே வருடந்தோறும் புதுப்பதிப்பு வெளியிடும்போது, 2000 வருடத்திற்கு முந்தைய ஒரு சிறு நூலில் எல்லாம் இருக்கிறது என்று ஒருவர் சொல்வாரென்றால் என்ன வென்பது. அதைப்பற்றி விமர்சிப்பதே கூட வீண்.
ஆனால் நிர்வாகம் என்பது அப்படியல்ல. ஒரு சமூகம், தலைவன், குடிமக்கள் என்ற அமைப்புகள் வந்த நாளிலேயே நிர்வகிப்பது பற்றிய அறிவும் சிந்தனைகளும் வந்துவிட்டன. எனவேதான் திருக்குறளில் வரும் சில நிர்வாகக் கருத்துகள் என்றும் பொருந்தக்கூடியதாக இருக்கின்றன. இந்த வகையில் ஏற்கனவே எனக்குப் பிடித்த இரு குறள்கள் நிர்வாகவியல் கருத்துகளை விளக்கும் முறை பற்றி எழுதியிருந்தேன். அதற்கான சுட்டி:
ஒன்று
இரண்டு
அவ்வகையில் மூன்றாவதாக இதோ இன்னொன்று.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
வெள்ளி, ஜனவரி 30, 2004
வியாழன், ஜனவரி 29, 2004
ஒன்பது ரூபாய் நோட்டு
இன்றைய தினமணியில் ஒரு செய்தி. 'ஒன்பது ரூபாய் நோட்டு' என்ற ஒரு படத்தின் தொடக்க விழா பற்றியது. இதைப் படித்ததும் ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது, சும்மா டமாஸ். கோயமுத்தூர்காரனா இருந்துட்டு இந்தக் கதை சொல்லவும் பயமா இருக்குது. முதலில் ஒரு டிஸ்கிளைமர்: தயவு செய்து இதுக்கும் எங்க ஊருக்கும் முடிச்சுப் போடாதீங்க;-)
ஒருத்தன் சரியான கேப்மாரி. எல்லாவிதமான ஃப்ராடு வேலைகளிலும் கில்லாடி. எத்தனை நாளைக்கி திருட்டு, பிக்பாக்கட்டுன்னு உடம்பை வளைச்சு கஷ்டப்படறது. நேத்து முளைச்ச பசங்கல்லாம் சைபர் திருட்டு, அது இதுன்னு நோகாம நோம்பிகும்பிடறானுங்க. நானும் இனி கொஞ்சம் சொகுசான தொழில் பண்ணப்போறேன்னுட்டு, கள்ள நோட்டு அடிக்கலாம்னு திட்டம் போட்டான். ஒரு ஆர்டிஸ்டைக் கூட்டுச்சேர்த்து, ப்ளாக்கெல்லாம், (அட நம்ம blog இல்லீங்கோ) பண்ணி மெஷினை எங்கியோ புடிச்சு நோட்டும் அடிச்சுட்டான். முதல் நோட்டு ரெடியானதும், சாமி கிட்டே வெச்சு பூசையெல்லாம் பண்ணி (அவன் உஷா மாதிரி இல்லே;-) போணி பண்ணறதுக்கு எடுத்துட்டுப் போனான். அப்பத்தான் பாத்தான், அந்த டோரிக்கண்ணு ஆர்டிஸ்ட்டு 10 ரூபாய்னு போடற எடத்துல, 15 ரூபாய்னு போட்டு வச்சிருக்கிறதை!
சரி, தொலைஞ்சு போகட்டும். இவ்வளவு சிரமப்பட்டு அடிச்ச நோட்டை தூக்கி எறியவும் மனசு வல்லே. எங்காவது இதுக்கு ஒரு இளிச்சவாயன் மாட்டாமலா போயிறுவான், பாக்கலாம்னுட்டு நோட்டம் விட்டான். அப்பத்தான் பக்கத்துல ரயில்வே கேட்டுக்கிட்ட நொண்டி விளக்கு ஒண்ண வெச்சுக்கிட்டு ஒரு பெருசு பொட்டிக்கடை வச்சிருக்கிறது ஞாபகம் வந்தது. பகல்லியே அந்தப் பெருசுக்கு பத்துக்கும் இருபதுக்கும் வித்தியாசம் தெரியாது, இந்த இருட்டில என்ன தெரியப்போகுது. அந்தாளுதான் நமக்கு சரியான கேஸ்ன்னு அங்க போனான்.
'அய்யா, சவுக்கியங்களா?'ன்னு ரொம்ப பாசமா விசாரிச்சுட்டே, 'ஏனுங்க, இதுக்கு சில்லரை கிடைக்குங்களா'ன்னு நைசா புது நோட்டை நீட்டினான். அந்தப் பெருசும் வாங்கி என்னமோ பெரிசாக் கண்டுபுடிக்கிறமாதிரி உத்து உத்துப் பாத்துட்டு, காசுப் பெட்டிக்குள்ளே பொட்டுட்டு, சில்லரையா ரெண்டு நொட்டுக் குடுத்தது. அதை வாங்கினதும், 'வுடுறா சவாரி'ன்னு நம்மாளு அங்கிருந்து நைசா நழுவிட்டான்.
கடையிலேர்ந்து கண்மறைவா வந்து நின்னு கையிலிருந்த ரூபாயைப் பாத்தா, எட்டு ரூபாய் நோட்டு ஒண்ணும், ஏழு ருபாய் நோட்டு ஒண்ணும் இருந்துச்சாம்.
இந்த படத்திறப்பு விழாவில் ஜெயகாந்தன், தங்கர் பச்சான் போன்ற பெரிய தலைகள் எல்லாம் தெரியுது. அதனால் இது நல்ல நோட்டா வரும்னு நம்புவோம்.
ஒருத்தன் சரியான கேப்மாரி. எல்லாவிதமான ஃப்ராடு வேலைகளிலும் கில்லாடி. எத்தனை நாளைக்கி திருட்டு, பிக்பாக்கட்டுன்னு உடம்பை வளைச்சு கஷ்டப்படறது. நேத்து முளைச்ச பசங்கல்லாம் சைபர் திருட்டு, அது இதுன்னு நோகாம நோம்பிகும்பிடறானுங்க. நானும் இனி கொஞ்சம் சொகுசான தொழில் பண்ணப்போறேன்னுட்டு, கள்ள நோட்டு அடிக்கலாம்னு திட்டம் போட்டான். ஒரு ஆர்டிஸ்டைக் கூட்டுச்சேர்த்து, ப்ளாக்கெல்லாம், (அட நம்ம blog இல்லீங்கோ) பண்ணி மெஷினை எங்கியோ புடிச்சு நோட்டும் அடிச்சுட்டான். முதல் நோட்டு ரெடியானதும், சாமி கிட்டே வெச்சு பூசையெல்லாம் பண்ணி (அவன் உஷா மாதிரி இல்லே;-) போணி பண்ணறதுக்கு எடுத்துட்டுப் போனான். அப்பத்தான் பாத்தான், அந்த டோரிக்கண்ணு ஆர்டிஸ்ட்டு 10 ரூபாய்னு போடற எடத்துல, 15 ரூபாய்னு போட்டு வச்சிருக்கிறதை!
சரி, தொலைஞ்சு போகட்டும். இவ்வளவு சிரமப்பட்டு அடிச்ச நோட்டை தூக்கி எறியவும் மனசு வல்லே. எங்காவது இதுக்கு ஒரு இளிச்சவாயன் மாட்டாமலா போயிறுவான், பாக்கலாம்னுட்டு நோட்டம் விட்டான். அப்பத்தான் பக்கத்துல ரயில்வே கேட்டுக்கிட்ட நொண்டி விளக்கு ஒண்ண வெச்சுக்கிட்டு ஒரு பெருசு பொட்டிக்கடை வச்சிருக்கிறது ஞாபகம் வந்தது. பகல்லியே அந்தப் பெருசுக்கு பத்துக்கும் இருபதுக்கும் வித்தியாசம் தெரியாது, இந்த இருட்டில என்ன தெரியப்போகுது. அந்தாளுதான் நமக்கு சரியான கேஸ்ன்னு அங்க போனான்.
'அய்யா, சவுக்கியங்களா?'ன்னு ரொம்ப பாசமா விசாரிச்சுட்டே, 'ஏனுங்க, இதுக்கு சில்லரை கிடைக்குங்களா'ன்னு நைசா புது நோட்டை நீட்டினான். அந்தப் பெருசும் வாங்கி என்னமோ பெரிசாக் கண்டுபுடிக்கிறமாதிரி உத்து உத்துப் பாத்துட்டு, காசுப் பெட்டிக்குள்ளே பொட்டுட்டு, சில்லரையா ரெண்டு நொட்டுக் குடுத்தது. அதை வாங்கினதும், 'வுடுறா சவாரி'ன்னு நம்மாளு அங்கிருந்து நைசா நழுவிட்டான்.
கடையிலேர்ந்து கண்மறைவா வந்து நின்னு கையிலிருந்த ரூபாயைப் பாத்தா, எட்டு ரூபாய் நோட்டு ஒண்ணும், ஏழு ருபாய் நோட்டு ஒண்ணும் இருந்துச்சாம்.
இந்த படத்திறப்பு விழாவில் ஜெயகாந்தன், தங்கர் பச்சான் போன்ற பெரிய தலைகள் எல்லாம் தெரியுது. அதனால் இது நல்ல நோட்டா வரும்னு நம்புவோம்.
செவ்வாய், ஜனவரி 27, 2004
பனிக்காட்டில் ஒரு விளையாட்டு
என் 1991 டயோட்டா (தேசிமுத்திரை;-) கேம்ரி பொதுவாக ஒரு பிரச்னையும் தராது. கொள்ளு மட்டும் கொடுத்தால் லொள்ளு எதுவும் பண்ணாமல் அதுபாட்டுக்கு முச்சிரைக்க ஓடிக்கொண்டே இருக்கும் அரபுக்குதிரை.
போனவாரம் ஒரு நாள் இரவில் காரின் உட்புறக் கூரை விளக்கை அணைக்காமல் விட்டுவிட அடுத்த நாள் ஸ்டார்ட் ஆகவில்லை. பேட்டரியில் வழக்கமான கொள்திறன் பெருமளவு இந்தக் குளிரில் குறைந்துவிடுகிறது. ஆனால் அதே குளிர் காரணமாக எஞ்சினோ ஸ்டார்ட் ஆவதற்கு அதிக ஆற்றலைக் கேட்கிறது. எனவே பேட்டரியை சிறிது விரயப்படுத்திவிட்டாலும் போச்சு, அடுத்தநாள் ஜம்ப்ஸ்டார்ட் தான். அதற்கென்றே AAA போன்ற அவசர உதவி சேவைகள் இருக்கின்றன. பழைய'காரர்'கள் ;-) இதில் கட்டாயம் உறுப்பினராய் இருக்கிறோம். விளக்கை அணைக்காமல் விட்டதற்காக அம்மணியைத் திட்டிவிட்டு (இது மாதிரி சான்ஸெல்லாம் சுலபத்தில் கிடைக்காது-)) தொலைபேசியில் உதவியை அழைக்க, அடுத்த 15 நிமிடத்தில் வந்து ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்துவிட்டுப் போனார், இந்தக் குளிரில் கையுறைகூடப் போடாத புண்ணியவான்.
அடுத்த நாள் டார்கெட் கடைக்குப் போகும்போது, கொட்டும் பனியில் அவசர அவசரமாய் இறங்கி ஒடி, மணிக்கணக்கில் இதமாக சுற்றிவிட்டு வந்துபார்த்தால், முகப்பு விளக்குப் போட்டது போட்டபடியே இருந்து பேட்டரியை உறிஞ்சி சாப்பிட்டிருந்தது. சூடாக பெண்டாட்டியிடம் ஏத்து வாங்கிக்கொண்டு (பழிக்குப் பழி வாங்குவதில் ரிவால்வார் ரீட்டா தோற்றுவிடுவாள்:-)), மறுபடியும் தொலைபேசியில் அழைத்து ('நேத்துத்தான் ஜம்ப்ஸ்டார்ட் கேட்டிருக்கீங்க...'-மாதரசி. 'ஹி.ஹி. ஆமாம்..இதை இப்படியே விடமுடியாது. நாளைக்கே பேட்டரியை செக் பண்னுகிறேனா இல்லையா பார்..'-அடியேன்) வேண்ட, இன்னொரு புண்ணியவான் வந்து ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தார்.
இந்த வாரம் மறுபடியும் பொழுது போகவேண்டுமே. மறுபடியும் அணைக்காமல் விட, மறுபடியும்..அட கேவலம்ப்பா, எத்தனை தடவை பிரதாபங்களை திரும்பச்சொல்வது? ஆனால் இன்னொரு முறை AAA வை அழைக்க நெஞ்சில் உரமில்லை. அன்றே சொன்னார் ஒரு நல்லவர் 'ஜம்ப்ஸ்டார்ட் கேபிள் வாங்கி வண்டியிலேயே வெச்சிக்குங்க' என்று. 'நீங்க வச்சிருக்கீங்களா, என்னைமட்டும் சொல்லுறீங்க'ன்னு அவர்கிட்டே வீர வசனம் பேசினேன். அவர் கார் புதுசு. அத்தோடு அது லைட்டை அணைக்காமல் வந்தா கூப்பிட்டுச் சொல்லும், கத்தும். நம்மளுது சாந்த சொருபி, தேமேன்னு நின்னு கழுத்தை அறுக்கும்.
இந்த முறை பக்கத்தில் இருக்கும் தேசி நண்பரை உதவிக்கு அழைத்து அவரிடம் இருந்த ஜம்ப்பர் கேபிள் மூலம் ('இன்னிக்கே நானும் ஒண்ணு வாங்கப்போறேன், தாய் மேல் ஆணை..') ஸ்டார்ட் பண்ணினோம். அதிலும், கார் மூக்கு உள்ளேபார்த்து நின்றதால், 0F குளிர்நிலையில், -20F உணர்நிலையில், அதை வெளியே தள்ளி, ஸ்டார்ட் பண்ணுவதற்குள் மூக்கில் தண்ணிவந்து கைகள் மரத்துப் போச்சு. ('தேங்க்ஸ், என்னை மாதிரி ஆளுகளுக்காகவே கேபிள் வாங்கி வெச்சு உதவறதுக்கு..' 'மிஸ்டர், உங்களை மாதிரி ஆளுகளுக்கா, எனக்கு வாராவாரம் கேஸ் [பெட்ரோல்] போடலைன்னாகூட சமாளிச்சுடுவேன், ஆனா அடிக்கடி ஜம்ப்ஸ்டார்ட்டலைன்னா ஒண்ணுமே ஓடாது, தெரியுமா'-இது அந்தத் தெய்வம்) சொன்னமாதிரியே, பிறகு வால்மார்ட்டில் ஜம்ப்பர் கேபிள் வாங்கியாச்சு. ஆனால், எனக்குத் தெரியும், இனி ஒரு நாள் கூட இது மாதிரி நடக்காது. அது பாட்டுக்கு முதுகுப்பெட்டியில் தூங்கும்.
கேபிள் வாங்கினதுக்காகவாவது இன்னொரு நாள் லைட்டை அணைக்க மறக்கணும் என்று நினைக்கிறேன். சனியன், அதுக்கப்புறம் ஒரு ஏழெட்டு வாய்ப்பு வந்துவிட்டது, நானும் இதை மறக்காமல் இருக்கிறேன், ஆனால் லைட் மட்டும் எப்படியோ அணைந்திருக்கிறது. (யாரோ குரங்கு, மருந்து என்ற வார்த்தைகளைபோட்டு ஒரு கதை வைத்திருக்கிறார்களாமே, இதுக்குத்தோதாக..) எப்படியும் ஒரு வாரத்துக்குள் இன்னொரு வாய்ப்புக் கிடைக்காமலா போய்விடும்? கிடைக்கும், கிடைக்கும்! அதிலும் 'நாளை இரவு எப்படியும் ஒரு அடி பனி இருக்கும்'னு டிவிலெ சொல்றான், கட்டாயம் சான்ஸ் இருக்கு. நம்பிக்கைதானே வாழ்க்கை!
போனவாரம் ஒரு நாள் இரவில் காரின் உட்புறக் கூரை விளக்கை அணைக்காமல் விட்டுவிட அடுத்த நாள் ஸ்டார்ட் ஆகவில்லை. பேட்டரியில் வழக்கமான கொள்திறன் பெருமளவு இந்தக் குளிரில் குறைந்துவிடுகிறது. ஆனால் அதே குளிர் காரணமாக எஞ்சினோ ஸ்டார்ட் ஆவதற்கு அதிக ஆற்றலைக் கேட்கிறது. எனவே பேட்டரியை சிறிது விரயப்படுத்திவிட்டாலும் போச்சு, அடுத்தநாள் ஜம்ப்ஸ்டார்ட் தான். அதற்கென்றே AAA போன்ற அவசர உதவி சேவைகள் இருக்கின்றன. பழைய'காரர்'கள் ;-) இதில் கட்டாயம் உறுப்பினராய் இருக்கிறோம். விளக்கை அணைக்காமல் விட்டதற்காக அம்மணியைத் திட்டிவிட்டு (இது மாதிரி சான்ஸெல்லாம் சுலபத்தில் கிடைக்காது-)) தொலைபேசியில் உதவியை அழைக்க, அடுத்த 15 நிமிடத்தில் வந்து ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்துவிட்டுப் போனார், இந்தக் குளிரில் கையுறைகூடப் போடாத புண்ணியவான்.
அடுத்த நாள் டார்கெட் கடைக்குப் போகும்போது, கொட்டும் பனியில் அவசர அவசரமாய் இறங்கி ஒடி, மணிக்கணக்கில் இதமாக சுற்றிவிட்டு வந்துபார்த்தால், முகப்பு விளக்குப் போட்டது போட்டபடியே இருந்து பேட்டரியை உறிஞ்சி சாப்பிட்டிருந்தது. சூடாக பெண்டாட்டியிடம் ஏத்து வாங்கிக்கொண்டு (பழிக்குப் பழி வாங்குவதில் ரிவால்வார் ரீட்டா தோற்றுவிடுவாள்:-)), மறுபடியும் தொலைபேசியில் அழைத்து ('நேத்துத்தான் ஜம்ப்ஸ்டார்ட் கேட்டிருக்கீங்க...'-மாதரசி. 'ஹி.ஹி. ஆமாம்..இதை இப்படியே விடமுடியாது. நாளைக்கே பேட்டரியை செக் பண்னுகிறேனா இல்லையா பார்..'-அடியேன்) வேண்ட, இன்னொரு புண்ணியவான் வந்து ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தார்.
இந்த வாரம் மறுபடியும் பொழுது போகவேண்டுமே. மறுபடியும் அணைக்காமல் விட, மறுபடியும்..அட கேவலம்ப்பா, எத்தனை தடவை பிரதாபங்களை திரும்பச்சொல்வது? ஆனால் இன்னொரு முறை AAA வை அழைக்க நெஞ்சில் உரமில்லை. அன்றே சொன்னார் ஒரு நல்லவர் 'ஜம்ப்ஸ்டார்ட் கேபிள் வாங்கி வண்டியிலேயே வெச்சிக்குங்க' என்று. 'நீங்க வச்சிருக்கீங்களா, என்னைமட்டும் சொல்லுறீங்க'ன்னு அவர்கிட்டே வீர வசனம் பேசினேன். அவர் கார் புதுசு. அத்தோடு அது லைட்டை அணைக்காமல் வந்தா கூப்பிட்டுச் சொல்லும், கத்தும். நம்மளுது சாந்த சொருபி, தேமேன்னு நின்னு கழுத்தை அறுக்கும்.
இந்த முறை பக்கத்தில் இருக்கும் தேசி நண்பரை உதவிக்கு அழைத்து அவரிடம் இருந்த ஜம்ப்பர் கேபிள் மூலம் ('இன்னிக்கே நானும் ஒண்ணு வாங்கப்போறேன், தாய் மேல் ஆணை..') ஸ்டார்ட் பண்ணினோம். அதிலும், கார் மூக்கு உள்ளேபார்த்து நின்றதால், 0F குளிர்நிலையில், -20F உணர்நிலையில், அதை வெளியே தள்ளி, ஸ்டார்ட் பண்ணுவதற்குள் மூக்கில் தண்ணிவந்து கைகள் மரத்துப் போச்சு. ('தேங்க்ஸ், என்னை மாதிரி ஆளுகளுக்காகவே கேபிள் வாங்கி வெச்சு உதவறதுக்கு..' 'மிஸ்டர், உங்களை மாதிரி ஆளுகளுக்கா, எனக்கு வாராவாரம் கேஸ் [பெட்ரோல்] போடலைன்னாகூட சமாளிச்சுடுவேன், ஆனா அடிக்கடி ஜம்ப்ஸ்டார்ட்டலைன்னா ஒண்ணுமே ஓடாது, தெரியுமா'-இது அந்தத் தெய்வம்) சொன்னமாதிரியே, பிறகு வால்மார்ட்டில் ஜம்ப்பர் கேபிள் வாங்கியாச்சு. ஆனால், எனக்குத் தெரியும், இனி ஒரு நாள் கூட இது மாதிரி நடக்காது. அது பாட்டுக்கு முதுகுப்பெட்டியில் தூங்கும்.
கேபிள் வாங்கினதுக்காகவாவது இன்னொரு நாள் லைட்டை அணைக்க மறக்கணும் என்று நினைக்கிறேன். சனியன், அதுக்கப்புறம் ஒரு ஏழெட்டு வாய்ப்பு வந்துவிட்டது, நானும் இதை மறக்காமல் இருக்கிறேன், ஆனால் லைட் மட்டும் எப்படியோ அணைந்திருக்கிறது. (யாரோ குரங்கு, மருந்து என்ற வார்த்தைகளைபோட்டு ஒரு கதை வைத்திருக்கிறார்களாமே, இதுக்குத்தோதாக..) எப்படியும் ஒரு வாரத்துக்குள் இன்னொரு வாய்ப்புக் கிடைக்காமலா போய்விடும்? கிடைக்கும், கிடைக்கும்! அதிலும் 'நாளை இரவு எப்படியும் ஒரு அடி பனி இருக்கும்'னு டிவிலெ சொல்றான், கட்டாயம் சான்ஸ் இருக்கு. நம்பிக்கைதானே வாழ்க்கை!
சனி, ஜனவரி 24, 2004
தீவிபத்துகளின் கொடுமை
உயிர் போவதிலேயே மிகுந்த வதைபட்டு துடித்து இறப்பது தீவிபத்தாகத் தான் இருக்கமுடியும். அதிலும் ஒரே இடத்தில் பல உயிர்கள் துடித்து அடங்குவதை நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது. இன்று காலை (இந்திய நேரம்) ஸ்ரீரங்கத்தில் நடந்தது மிகப் பெரிய சோகம். மணமகன் உள்பட நெருங்கிய குடும்பங்கள் பலரை இழந்து தவிக்கும் நிலைக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். விரைவாக வெளியேற சரியான வழியை அமைக்காத மண்டப நிர்வாகத்தைச் சொல்லலாம். அல்லது இடம் கொள்ளும் அளவைக் கணிக்காமல் அடைந்து கொண்ட மணவீட்டாரைச் சொல்லலாம். அவசரக் கோலத்தில் மின்சாரக் கம்பிகளை அங்கும் இங்கும் இழுக்கும் வீடியோ எடுப்பவர்களைச் சொல்லலாம். ஆனால் இழந்தது இழந்ததுதான். மீட்டு எடுக்க முடியாத இழப்பு.
சில சமயம் இந்தியாவில் உயிரின் விலை ரொமப மலிவு, சரியான பாதுகாப்பில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டிவிடுகிறோம். நம் மக்கள்தொகை, அடர்த்தி, பொருளாதார நிலை என்று எத்தனையோ இடர்ப்பாடுகள். பல ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி என்று நினைக்கிறேன், அங்கு ஒரு டூரிங் டாக்கீஸ் தீப்பிடித்து பலத்த உயிரிழப்பு. அப்போது அரசு ஒரேயடியாக டூரிங் டாக்கீஸ்களை தடைசெய்தது. கொஞ்ச நாள் முன் ஏர்வாடியில் என்று நினைக்கிறேன், மனநல விடுதி (?) ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலும் பெரிய சேதம். அதிலும் ஏதோ தடாலடியாக உத்தரவெல்லாம் வந்தது என்று நினைக்கிறேன். அதுபோல இந்த துயரத்துக்குப் பின்னும் ஏதாவது வரலாம். வரவேண்டும். ஆனால் சட்டம் என்பதாக இல்லாமல், மக்களும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும். சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இயன்ற வரை கடைப்பிடிக்கவேண்டும்.
இதுவே அமெரிக்காவானால் இப்படியெல்லாம் நடக்காது என்று சொல்லி விட முடியாது. சென்ற வருடம் பிப்ரவரியில் இரு பெரிய விபத்துகள் நடந்தன. அதில் ஒன்றில் ஒரு இரவுவிடுதியில் 97 பேர் இறந்தார்கள். சட்டங்கள், படிப்பு, கடைப்பிடித்தல், வசதி வாய்ப்பு எல்லாம் இருந்தது, ஆனாலும் என்ன ஆனது? ஆகவே ஒரேயடியாக நம் நாட்டையும் குறைசொல்ல முடியாது. அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக அமையும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
சில சமயம் இந்தியாவில் உயிரின் விலை ரொமப மலிவு, சரியான பாதுகாப்பில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டிவிடுகிறோம். நம் மக்கள்தொகை, அடர்த்தி, பொருளாதார நிலை என்று எத்தனையோ இடர்ப்பாடுகள். பல ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி என்று நினைக்கிறேன், அங்கு ஒரு டூரிங் டாக்கீஸ் தீப்பிடித்து பலத்த உயிரிழப்பு. அப்போது அரசு ஒரேயடியாக டூரிங் டாக்கீஸ்களை தடைசெய்தது. கொஞ்ச நாள் முன் ஏர்வாடியில் என்று நினைக்கிறேன், மனநல விடுதி (?) ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலும் பெரிய சேதம். அதிலும் ஏதோ தடாலடியாக உத்தரவெல்லாம் வந்தது என்று நினைக்கிறேன். அதுபோல இந்த துயரத்துக்குப் பின்னும் ஏதாவது வரலாம். வரவேண்டும். ஆனால் சட்டம் என்பதாக இல்லாமல், மக்களும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும். சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இயன்ற வரை கடைப்பிடிக்கவேண்டும்.
இதுவே அமெரிக்காவானால் இப்படியெல்லாம் நடக்காது என்று சொல்லி விட முடியாது. சென்ற வருடம் பிப்ரவரியில் இரு பெரிய விபத்துகள் நடந்தன. அதில் ஒன்றில் ஒரு இரவுவிடுதியில் 97 பேர் இறந்தார்கள். சட்டங்கள், படிப்பு, கடைப்பிடித்தல், வசதி வாய்ப்பு எல்லாம் இருந்தது, ஆனாலும் என்ன ஆனது? ஆகவே ஒரேயடியாக நம் நாட்டையும் குறைசொல்ல முடியாது. அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக அமையும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
வெள்ளி, ஜனவரி 23, 2004
சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 15
என் அம்மாவும் மகளும் 2000-ல்
அங்கு எனக்குக் கிடைத்த Godfather தான் திரு. ராஜகோபாலன் அவர்கள். ஆர்ஆர் என்று சொல்லப்படும் அவர் பழைய எம்.ஐ.டி. ஆட்டோ பட்டதாரி. அங்கு எம்.ஐ.டி. யில் படித்த படையே உண்டு. அவர்களுக்குள் ஒரு பிணைப்பும் உண்டு. மோட்டார் கம்பெனி என்பதால் அந்த சிறப்புப் படிப்பு ஒரு கூடுதல் தகுதியை வழங்கியது (என்று நிறையப் பேர் நினைத்துக் கொண்டார்கள்!) ஆனால் அங்கு செய்யப்பட்ட இயந்திரங்கள் மோட்டார் வாகங்கள் அல்ல, மோட்டார் வாகன அமைப்புகளின்மேல் கட்டப்பட்ட இயந்திரங்கள். ஆகவே மோட்டார் வாகனவியலுக்கு இணையாக எந்திரவியலுக்கும் வேலை இருந்தது. இதையெல்லாம் புரிந்து கொண்டு என்னை அடையாளம் கண்டுகொண்டவர் ஆர்ஆர்.
அவர் சிரமப்பட்டு நல்ல வேலைகளை எனக்கு பெற்றுத்தந்தார். என்னை நன்றாக முன்னிறுத்தினார். இரண்டு வருடத்தில் நல்ல பேர் எடுத்துவிட்டேன். அதுமட்டுமல்லாமல் என்னை மேற் கொண்டு படிக்கச்சொல்லித் தூண்டியவரும் அவரே. முதலில் எம்.ஐ.டி.யில் மாலை நேர எம்.ஈ. வகுப்புக்கு போக ஆரம்பித்தேன். அது ஒரு கொடுமையான அனுபவம். எனக்கு சென்னைக்கு வீட்டை மாற்றவும் தயக்கமாய் இருந்தது. நல்ல வேளையாக அடுத்த வருடம் ஐஐடியில் எம்.டெக். வகுப்புக்கு ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைத்தது. எல்லாரும் சொன்ன கம்பியூட்டர் சயன்ஸ் மற்றும் எனக்குப் பிடித்த எஞ்சினீரிங் மெக்கானிக்ஸ் இரண்டுக்கும் விண்ணப்பித்தேன். இரண்டுமே கிடைத்தது. ஆனால் அதற்குள் யாரோ குளறுபடிசெய்து எங்கள் துறைத்தலைவரிடம் நமக்கு எதுக்கு கம்பியூட்டர் சயன்ஸ்? என்று (சரியாக) கேட்கவும் அவர் என்னை எஞ்சினீரிங் மெக்கானிக்ஸில் சேரச் சொல்லிவிட்டார். எனக்கு வருத்தமில்லை.
ஐஐடியில் ஒருவருடம் சொல்லப்போனால் எட்டுமாதம்தான், எளிதில் ஓடியது. பிறகு மீண்டும் இரு வருடங்கள் திருவள்ளூரில் கழித்துவிட்டு, கோவைக்குப் பயணமானதும், அங்கு ரூட்ஸ் நிறுவனத்தில் அடுத்த ஏழு வருடம் பணிபுரிந்ததும், பிறகு இந்த இரண்டரை வருடமாக அமெரிக்காவில் வசிப்பதும்...காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நல்லவர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களைக் காண, அவர்கள் கண்ணில் நாம் பட, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் இருக்க, தேவை எளிமையான மனம் மட்டுமே. முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு நல்லது செய்ய முயல்வதன் மூலம் அன்று எனக்குக் கிடைத்த நல்லவர்களை நினைவுகூருகிறேன்.
வாழ்க வளமுடன்!
-முற்றும்
வியாழன், ஜனவரி 22, 2004
சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 14
சண்முகம், நான், அழகிரி - 2000-ல்
ஞாயிறுகளில் காலையில் அழகிரி அறையில் கூட்டுப்படிப்பு. மற்ற பாடங்களை விட, கணிதம் மட்டும் போட்டுப் பழகினால்தான் வரும். எஞ்சினீரிங் கல்வியில் பெரும்பாலும் பாடங்களில் கணக்கு அடிப்படையில் கேள்விகள் இருக்கும். எனவே அவற்றை செய்து பார்த்து எங்களைத் தீட்டிக்கொள்ள இந்தக் கூட்டுப் படிப்பு உதவியது. எங்கள் கூட்டுப்படிப்புக்கு கால அட்டவணை செய்து, தேவையான புத்தகங்கள், நோட்ஸ் எல்லாம் சேகரித்து, என்னையும் கறாராக வரவைத்து, 'படிக்க வைத்தது' அழகிரி. இருவரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்த நாட்கள் நிறைய. ஒரு மணி நேரம் படித்தால், அரை மணின் நேரம் பேக்கரி விசிட், அரசியல் அரட்டை, என்று பொழுது கழியும். அழகிரி அறையிலும் படிக்கும் போது ரேடியோ பாடிக்கொண்டே இருக்கும். அரசியல், சமூகம் சம்பந்தப்பட்ட பார்வையும் இருவருக்கும் ஒரே மாதிரியாக அமைந்ததும் நெருக்கத்தை அதிகப்படுத்தியது.
இப்படி என்னைப் படிக்க வைத்ததில் அழகிரிக்கு ஒரு அஞ்சு மார்க் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்றால் எனக்கு ஒரு இருபது மார்க்காவது இந்தக் கூட்டுப்படிப்பினால் மட்டுமே கிடைத்தது. முதல் செமஸ்டரில் மற்ற மாணவர்களைப் பார்க்க மலைப்பாய் இருந்தது. என்னை போல இரண்டு வருடம் முன் டிப்ளமா படித்தவர்களில் இருந்து, பாலிடெக்னிக்கில் டிப்ளமாவுக்கு வாத்தியாராக இருக்கும் 45 வயதுக்காரர் வரை இருந்தார்கள். சிலர் வேலையை விட்டுவிட்டு, அடுத்த மூன்றுவருடம் படிப்புக்கே முன்னுரிமை என்றும் இருந்தார்கள். ஆனால் அவர்களைப் பற்றிய பயமெல்லாம் முதல் செமஸ்டர் ரிசல்ட் வந்ததும் தெளிந்தது. சித்தூருக்கப்புறம் முதல் இடத்தில் இருந்து நழுவிப்போயிருந்தவன் இப்போது மீண்டும் அங்கு வந்தது மட்டுமல்லாமல், முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் இடையில் பத்துப் பதினைந்து மார்க் வித்தியாசமும் இருந்தது. அந்த இரண்டாம் இடம் வேறு யாருமல்ல, அழகிரிதான்.
என்னைப் பார்க்க வேண்டுமானால், வீடு, அலுவலகம், கல்லூரி, அழகிரி அறை- இந்த நான்கு இடங்கள்தான் என்று ஆகிப்போனது. உலகுவைப்போலவே, அழகிரியும் எனக்காக பேக்கரிக்கும் மெஸ்ஸுக்கும் செலவு செய்தது எத்தனை முறை என்று கணக்கில் அடங்காது. இறுதி செமஸ்டர் வெகேஷனில் மைசூர், பெங்களூர் டூர் போகலாம் என்று திட்டம் போட்டதும் , அப்போது மறுபடியும் சில பிரச்னைகளால் எவரெஸ்ட் நிறுவனம் மூடப்படும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்க, நான் தயங்கியதும், எனக்காக அழகிரியே எல்லா செலவுகளையும் செய்ததும் மறக்க முடியாதவை.
ஒரு வழியாக பி.ஈ. படிப்பு முடிவுக்கு வந்தது. எவரெஸ்ட் கிட்டத்தட்ட மூடப்பட்டுவிட்டது. இன்னும் சில மாதங்கள் தாக்குப்பிடித்தால் எப்படியும் பி.ஈ.-ஐ வைத்து வேலை கிடைக்கும் என்று எப்படியோ இழுத்துப் பிடித்து ஓட்டினோம். கோவையில் வேறு வேலை கிடைப்பது அரிதாய் இருந்தது. எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகை பார்த்து அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருந்தேன். எவரெஸ்ட்டின் போட்டிக் கம்பெனிகளுக்கும் போட்டேன். பாலிடெக்னிக் ஒன்றில் ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால் 'அடுத்து 5 வருடங்களுக்கு வேறு வேலைக்குப் போக மாட்டேன் என்று' ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கக் கேட்டார்கள், மாட்டேன் என்று வந்துவிட்டேன். இன்னொரு கல்லூரியில் ஒப்பந்தம் இல்லாமல் கிடைத்தது. சரி என்று போய்விட்டு ஒரு மாதம் கழித்து விலகிக் கொண்டேன். அதற்குக் காரணம் பூனாவில் ஒரு வேலை கிடைத்ததுதான். ஆனால் அந்த வேலையை ஏற்றுக் கொள்வதற்குள் ஹிந்து பேப்பர் பார்த்து அப்ளை பண்ணியிருந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலைக்கு இன்டர்வியூ வந்தது. கிடைத்தும் விட்டது.
1987 ஜனவரியில் கோவையை விட்டு திருவள்ளூருக்குப் பயணமானேன்.
புதன், ஜனவரி 21, 2004
சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 13

ஒரு நாளாவது பணி போரடித்ததில்லை. அவர் பச்சை இங்க்கிலும் சிவப்பு இங்க்கிலும் தீட்டி வரைந்து கொடுக்கும் ஐடியாக்கள் கண்முன்னே உருவெடுத்து இயங்குவதைப் பார்க்கையில் ஒரு படைப்பாளனுக்குரிய பெருமையும் ஆனந்தமும் கிடைக்கப் பெற்றேன். ஒரு பதினெட்டு வயது டிப்ளமா ஹோல்டர்தானே என்று யாரும் அலட்சியப்படுத்த முடியாத அளவுக்கு அனுபவசாலிகளுடன் பணியாற்ற எனக்குத் தளம் அமைத்துக் கொடுத்தவர் திரு. சோமசுந்தரம். கொஞ்சம் கொஞ்சமாக என் யோசனைகளையும் ஏற்றுக்கொள்லும் அளவுக்கு என்னை நிலைப்படுத்திக் கொண்டேன்.
ஆயிரக்கணக்கில் ஆரம்பித்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள கருவிகள் என் வடிவமைப்பில் உருவாகும் அளவுக்கு என் மீது நம்பிக்கை வைத்தார்கள். என் மீது முழு நம்பிக்கை வைத்து முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். பெரும்பாலும் என் பணி தங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவோ, உடல் உழைப்பைக் குறைக்கவோ தேவைப்படும் சிறு கருவிகள், எஸ் பி எம் எனப்படும் விசேஷ தன்னுபயோக எந்திரங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, மூலப்பொருட்கள் சேகரித்து, செய்யும் இடத்தில் ஒருங்கிணைத்து, சோதனை செய்து, பணியில் ஈடுபடுத்துவது வரை தொடரும். இத்தனையும் நான் மட்டும் செய்யவில்லை. ஆனால் இத்தனை செய்பவரையும் ஒருங்கிணைக்கும் பணி, முக்கியச் சிக்கல்களைக் களையும் பணி, என்னுடையது.
இந்தப் பணி என் பி.ஈ. பகுதி நேரப்படிப்புக்கு ஒரு அருமையான ஆய்வுக்களமானது. உதாரணமாய் அன்று தான் மோட்டாருக்கு வி-பெல்ட் எப்படித் தேர்வு செய்வது என்று படித்திருப்பேன், அடுத்த நாள் அலுவலகத்தில் அதையே பணியில் பயன்படுத்த வேண்டியிருக்கும். இன்னொரு நாள் மோட்டாரின் குதிரைத்திறன் கண்டு தேர்வு செய்திருப்பேன். அடுத்த நாள் மாலை அதையே படிப்பேன். இப்படி பாடத்துக்கும், பணிக்கும் தொடர்புடன் படித்தால் படிப்பு எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதை அனுபவித்தாலே புரியும். ஜெர்மனியில் இத்தகைய கல்விமுறை இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஜெர்மன் எஞ்சினீயர்கள் உலகளவில் சிறந்த எஞ்சினீயர்களாக இருப்பத்ற்கு இதுவும் காரணம் என்று நினைக்கிறேன்.
தினமும் ஒரு முக்கோணத்தில் பயணம். வீட்டில் இருந்து காலை 7.30 மணிக்கு சைக்கிளில் புறப்பட்டால் அலுவலகத்தில் பணி முடித்து, மாலை 5 மணிக்கு வெளியே வந்து, வயிற்றுக்கு ஒரு ரூபாயில் எதாவது பதில் சொல்லிக்கொண்டு, அப்படியே சைக்கிளில் கல்லூரிக்குப் போவேன். இரவு 9 மணிக்குத் திரும்பவும் சைக்கிளில் வீடு வந்து 15 நிமிட ஆங்கிலச்செய்திகளோடு உணவை முடித்துப் படுக்கையில் விழவேண்டியதுதான். (அந்தச் சைக்கிளையும் ஒருவன் திருடிய கிளைக்கதை வேறு). 450 ரூபாயில் இருவர் மாதத்தை ஓட்டவேண்டியிருந்ததால், குறைந்த வாடகையில் ஒரு குடிசைவீட்டைப் பிடித்து அங்கேதான் வசித்தோம். அங்கும் மின்விளக்கில்லை. அப்புறம் எப்படிப் படிப்பது? வீட்டில் படித்தால் தானே? இது என்ன ஏழாம் வகுப்பா, வீட்டில் படிக்காமல் பாஸ் பண்னுவதற்கு, அப்படியே பாஸ் பண்ண முடிந்தாலும், வெறும் பாஸ் என்ன பயனைத் தரும்? நல்ல மதிப்பெண்ணுடன் பாஸ் பண்ண வேண்டாமா?
அழகிரி இருக்கையில் இந்தக் கவலை எல்லாம் எனக்கெதுக்கு?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
இணையத்திலே தமிழ் வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்மணம் சேவையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு வாழ்த்துகள் . என்னடா இது சோதனை , வலை...
-
பரண் என்று ஒன்று தமிழ்மணத்தில் இடதுபுறமாக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. யார் பார்க்கிறார்களோ இல்லையோ பழைய பெருச்சாளியான நான் அவ்வப்போது பார்...