சனி, நவம்பர் 15, 2003

தமிழ் வலைக்குறிப்புகள்/வலைப்பதிவுகள்/வலைப்பூக்கள்

சும்மா ஒரு ஆர்வத்தில் மற்ற இந்திய மொழிகளில் blogs எப்படிப் போகிறதென்று கூகிளில் தேடினபோது ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால் அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை! இணையத்தில் முதலில் ஏறின இந்திய மொழி தமிழ் என்று எங்கோ படித்ததாக ஞாபகம். அன்னிய வசிப்பிடத்தில், அன்னிய ஊரில், அன்னிய மக்களோடு அன்னியமான மொழியில் உரையாடி பணிபுரிவது கஷ்டமில்லை. ஆனால் அன்னிய உணவு வெகுவிரைவில் வெறுத்துப்போகும், நெருங்கினவர்களுடன் அன்னிய மொழியில் உரையாடினால் நெருக்கம் குறைந்து போகும். இது இரண்டும், நாக்கு சம்பந்தப்பட்ட விஷயம்.

இந்தி எதிர்ப்போ, இலக்கியங்களோ, ஆழ்வார்களோ, நாயன்மாரோ, திராவிட அரசியலோ, ஏதோ ஒன்று காரணமாய் மற்ற எல்லா இந்திய மொழி மக்களையும் விட எம் தமிழருக்கு தாய் மொழிப்பற்று அதிகம் தான்.எண்ணிகையிலே பெரிதாயிருக்கூடிய(?) இந்தியிலேகூட இன்னும் blogs எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்னும் போது, கட்டாயம் நம் பன்னெடுங்கால இலக்கியப் பாரம்பரியம் தான் இதற்கு முதல் அடிப்படையாகத் தெரிகிறது. வசதியும், வாய்ப்புகளும் உள்ள மற்ற இந்தியர் தங்கள் மொழியை இன்னும் தேவைக்கு உபயோகப்படுத்தும் (utility) ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது. கடையில், தெருவில், சினிமாவில் பயன்படுத்தமட்டும் அவர்களுக்கு மொழி தேவைப்படுகிறதோ? அதற்கு மேல் உள்ளுணர்வுகளுக்கான ஊடகமாகப் பார்க்கவில்லையோ என்று தோன்றுகிறது.

ஆனாலும் தமிழ் blogs-ல் எத்தனை பேர் உலாவி வாசிக்கிறார்கள் என்று தெரியவில்லை. comments பகுதியில் விழும் கருத்துக்கள் பெரும்பாலும் மற்றொரு blogger இட்டதாகத் தானிருக்கும். இது ஒருவகை பேனா நண்பர்கள் கூட்டம் போல் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்து என் வலைப்பக்கத்தை பார்க்கும் ஆர்வம் உள்ள பல நண்பர்கள் இணைய வசதி இல்லாததால் (கணினி, மின்னஞ்சல் வசதி இருந்தும்) பார்க்க முடிவதில்லை. எனக்கு தோன்றுகிறது, ஒவ்வொரு பதிவையும், அல்லது வாரம் ஒரு முறை இவர்களுக்கு pdf பைலாக அனுப்பிவைக்கலாமா என்று.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...