செவ்வாய், நவம்பர் 25, 2003

ஒரு படம், சிறு விளக்கம்


இந்தப் படத்தை ஒரு ரயில் காதல் கதை அத்தியாயத்துக்குக் கொசுறாக ஜோக்குக்கு பயன்படுத்தலாம் என்று வைத்திருந்தேன். ஆனால் அண்டை வீட்டு அன்பர் அளித்த அன்பான விருந்தின் மகிமையால் இரண்டு நாள் வயிற்றுவலியோ வலி. ராத்திரி தூங்க முடியாத அளவுக்கு வலி. நான் அதில் விழுந்துவிட்டதால் என் நிலையை விளக்கவே இந்தப் படம் பயன்பட்டது. இன்னும் நம்மில் நிறையப்பேர் விருந்தினரை உபசரிப்பதென்றால், அவர்கள் சாப்பிட முடியாமல் விழிக்கும் அளவுக்கு தட்டை நிரப்புவது தான் ஒரே வழி என்று நம்புவதால், அதே வழியில் இந்த அன்பரும் போனதால்... ம்.. என்ன சொல்லி என்ன செய்ய, எங்கே போனது என் புத்தி? இத்தனைக்கும் சாப்பாடு மிக மிக சுமார். ம்ம்..கிரஹணம் பிடிக்கவேண்டும் என்று பஞ்சாங்கத்தில் எழுதியிருந்தால் சுப்ரீம் கோர்ட் நினைத்தாலும் மாற்ற முடியாது. இதெல்லாம் என்ன சாதாரணம்.

ஒரு நண்பர் இந்தப் படத்தை எதுக்கு இங்கே போட்டிருக்கிறாய் என்று கேட்டதால், எல்லாரும் பரியைப்போல் விவரமானவர்களாய் இல்லாததால், ஒரு சிறு விளக்கம்: ரயிலை இயற்கையாகப் படம் வரைய ஆசைப்பட்டவரின் கடைசி ஒவியம் இது:-)

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...