வெள்ளி, டிசம்பர் 05, 2003

மாநில சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தல்

மூன்று முக்கிய மாநிலங்களில் பாஜக வென்றிருப்பது ஆச்சரியமான விஷயம். 'ஆட்சிக்கட்டில் துவேஷம்' தான் காரணம் என்று சிலர் சொன்னாலும், எந்த இழுபறியும் இல்லாமல் முடிவுகள் அமைந்திருப்பதைப் பார்க்கையில் அதுமட்டுமே காரணம் என்று கூறமுடியவில்லை. இதனால் மட்டும் 'மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு கூடுகிறது' என்று எடுத்துக் கொள்வதும் சரியாய் இருக்காது. என்னைப் பொறுத்தவரை, பாஜகவுக்கு அதன் தலைவர் ஒரு சாதகம் என்றால், காங்கிரசுக்கு அதன் தலைவர் தான் பாதகம். சட்டப்படி சோனியாவுக்கு எல்லா உரிமைகளும் இருந்தாலும், தார்மிக அடிப்படையில் அவரை என்னால் என் நாட்டுக்கு தலைவராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இயல்பாகவே, நேரு-இந்திரா-ராஜிவ்-குடும்பத்து ஆதிக்கத்தின் மேல் இருக்கும் ஒரு வெறுப்புக் கூட இதற்குக் காரணமாய் இருக்கலாம். புதிய மகளிர் முதல் அமைச்சர்கள் எப்படி செயல்படப்போகிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும். செல்விகள் ஜெயலலிதா, மாயாவதி ஆகியோர் தந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கையில் எனக்கு செல்வி உமாபாரதியைப் பார்த்தால்தான் பயமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...