வெள்ளி, டிசம்பர் 12, 2003

இருவர்

தமிழ் பத்திரிகைகள், செய்தித்தாள்கள் இவர்கள் இருவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். இந்த இரு பெண்களைச் சுற்றி எழுதப்பட்ட, எழுதப்படாத மர்மங்கள் எத்தனையோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஏதாவது பிரயோசனம் உண்டா? இவர்களைப் பார்த்தாலும் ஒரேயடியாக 'அய்யோ பாவம்' என்றும் சொல்ல முடியவில்லை. அடுத்தவர் வாழ்வின் அவலங்களை உள்நுழைந்து பார்த்து சுகப்படும் மனோபாவம் தான் இரண்டு நிகழ்வுகளும் பெறும் முக்கியத்துவத்துக்குக் காரணம். இரண்டும் பெரிய மனிதர் அத்துமீறல்கள் சம்பந்தப்பட்டவை. இரண்டுக்கும் கண்ணுக்குத்தெரியாத காரணங்கள் இருக்கும். நான் இவர்களைப் பற்றிய செய்திகளைப் படிப்பதை விட்டு பல நாட்கள் ஆகின்றன. நீங்கள்?

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...