புதன், டிசம்பர் 31, 2003

சேர்ந்திசைப் பாடல்கள்

ஒவ்வொரு நாளும் பகல் 12.40 மணி செய்திகளுக்குப் பின் தமிழக வானொலி நிலையங்கள் 'சேர்ந்திசை' என்ற பெயரில் ஒரு குழுவினர் சேர்ந்து இசைக்கும் பாடல்களை ஒலிபரப்பும். இந்த வரிசையில் பல வேறு மொழிப் பாடல்கள் இருக்கும். திரு எம். பி. சீனிவாசன் என நினைக்கிறேன், அவர் இசையில் நிறைய பாரதியார் பாடல்கள் ஒலிபரப்பாகும். கேட்க, மிக அருமையாக இருக்கும். இன்று என் மகளுக்கு 'ஓடி விளையாடு பாப்பா' சொல்லிக் கொடுக்கும்போது, அன்று சேர்ந்திசையில் கேட்ட அதே பாடல் மனதுக்குள் வந்து, இன்னும் காதில் ஒலிப்பதுபோலவே இருக்கிறது. அதிலும், 'காலை எழுந்தவுடன் படிப்பு..' என்று சொல்லி நிறுத்தி, 'ஒரெண்டு ரெண்டு, ஈரெண்டு நாலு..' என்பது போல குழந்தைகள் படிப்பது ஒலிக்கும், பிறகு 'பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு..' என்றதும் குழந்தைகள் ஒரு பாடல் பாடுவார்கள். சேர்ந்திசையில் வந்த பாரதியார் பாடல்கள் எங்காவது இணையம் வழி கிடைக்குமா, தெரிந்தவர்கள் சுட்டினால் மகிழ்வேன்.

அதே போல வாணி ஜெயராம் பாடிய பாரதியின் 'எந்தையும் தாயும்..', 'தொன்று நிகழ்ந்ததனைத்தும்..' போன்ற மெல்லிசைப்பாடல்களும் வானொலியில் ஒலிக்கும்போது உணர்ச்சிபொங்கக் கேட்டிருக்கிறேன். இவையும் எங்காவது கேட்கக் கிடைக்குமா தெரியவில்லை. மனப்பாடம் செய்வதில் ரொம்ப ரொம்ப பலவீனமான என்னைப் போன்றோருக்கே பாரதியின் பாடல்கள் பசுமையாக நினைவில் நிற்க இந்தப் பாடல்களை இசையமைத்த/பாடிய கலைஞர்களும் அடிக்கடி ஒலிபரப்பிய வானொலியும் ஆற்றிய பங்கு என்றும் நன்றியுடன் நினைவு கூறத்தக்கது.

நண்பர்கள் இவற்றுக்கு ஏதும் சுட்டிகள் தெரிந்தால் சொல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...