ஞாயிறு, டிசம்பர் 14, 2003

சதாம் உசேன் பிடிபட்டார்

ஒரு வகையில் நிம்மதியளிக்கக்கூடிய நிகழ்வு. அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத் தனத்தைப்பற்றி இப்போது பேசிப் பயனில்லை. இராக்கில் இன்று அவர்கள் ராஜ்ஜியம் நடக்கிறது. அது கொஞ்சநாள் உருப்படியாக நடந்து திரும்ப அமைதி வரவேண்டுமென்றால் சதாம் பிடிபட்டே ஆகவேண்டும். இதன் மூலம் வன்முறைகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. இராக்கியர்களுக்கு ஆட்சி மாற்றம் விரைவுபட வாய்ப்பிருக்கிறது. நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

இன்னொரு விதத்தில் அமெரிக்காவாலேயே சதாம் உசைனையும், ஒசாமாவையும் பிடிக்கமுடியவில்லை, நம்ம போலீஸ் எங்கே வீரப்பனைப் பிடிக்கிறது என்று கிண்டல் செய்ய முடியாமல் போய்விட்டது. அவர்களுக்கும் வேறுவழியில்லை, இனி பேசாமல் மான்கறி, ஆத்துக் குளியல் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் வீரத்தைக் காண்பித்து வீரப்பனையும் அடக்குவார்கள் என்று எதிர்ப்பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...