இந்தியா போன்ற பயனர் அடர்த்தி அதிகம் இருக்கக் கூடிய இடங்களுக்கு வைஃபை மிகப் பொருத்தமானது என்பது என் அபிப்ராயம். மேலும், நான் அறிந்த வரை, தொலைதொடர்புத் துறையின் கடைத்தள தொழில்நுட்பப் பணியாளர்களின் அக்கறையின்மை கம்பிவழித் தொடர்பில் இறுதிக்காதப் பிழைகள் பெருகுவதற்கு ஒரு முக்கியக் காரணம். அவர்களை மாற்றுவது என்ற கடினமான காரியத்தைவிட, வைஃபை, மற்றும் CDMA செல்பேசிகள் மூலம் இந்தக் குறிப்பிட்ட குறைபாட்டை சரி செய்வது எளிது என்று நினைக்கிறேன்.
இன்னொரு இற்றைப்பாடு: நண்பர் குமரகுரு காஷ்மீர் தால் ஏரியிலும் வைஃபை தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். நன்றி, (ஒரு குளிர்ச்சியான படம் போட வாய்ப்புக் கொடுத்தற்கும் சேர்த்து ;-)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக