செவ்வாய், டிசம்பர் 09, 2003

ஆணோ பெண்ணோ குப்பாயி, ரெண்டுல ஒண்ணு தப்பாது

தலைப்புக்கு அர்த்தம் எல்லாம் தேடக்கூடாது. அது ஒரு பாட்டி கதையில் வரும் வசனம். ஒருத்தர் பேரைப் பாத்ததுமே அவங்க ஆணா பெண்ணான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? அதுவும் முக்கியமா வேற்று நாட்டுக்காரர்களோடு, கடிதம் அல்லது மின்னஞ்சல் வழியாகப் பழகும்போது இது இன்னும் சிக்கல். நானே நம்ம வலைப்பூ மதியை கொஞ்ச நாள் ஆம்பளைன்னு நினைச்சிட்டிருந்தேன். அதுக்கு காரணம் என்னன்னு மரத்தடியில் இப்படிச் சொன்னேன்:

என் பெயர் A. காசிலிங்கம். அப்படித்தான் நம்ம ஊருல இருந்துச்சு. அமெரிக்கா வந்தப்புறம் நம் தமிழ் மக்களூக்கு எது மாறுதோ இல்லியோ பேர் மாறிப்போகும். ஒரு எழுத்தில ஒளிஞ்சுட்டிருக்கிற அப்பா பேருக்கெல்லாம் உயிர் வந்துரும். பேரெல்லாம் பார்த்தா ஒவ்வொருத்தரும் ஏதோ அறிஞர் பெருமக்கள் மாதிரி ரொம்ப மரியாதையா ஆயிடும். அப்படி 2 வருஷம் முன்னால் நான் காசிலிங்கம் ஆறுமுகம் ஆனேன். இந்த வெள்ளக்காரங்களுக்கு வசதியா இப்பக் காசி யோட நிறுத்திட்டேன்.

இதே லாஜிக்கில யோசிச்சு மதி கந்தசாமியும் நம்பள மாதிரி K. மதியழகன்னு ஒரு மாசமா நினச்சிட்டு இருந்தேன். அப்புறம்தான் அது சந்திரமதின்னு தெரிஞ்சுது. அட உண்மைங்க, நம்புங்க!


முதல் நிலை ஜெர்மன் (அது சிலருக்கு ஏன் 'யேர்மன்' ஆகியிருக்கும்ங்கிறதுக்கும் என்கிட்ட ஒரு கதை இருக்கு, அது இன்னொரு நாள்:-) மொழி படிக்கிறப்ப வாத்தியார் சொல்லிக் கொடுத்த ஒரு ஃபார்முலா எனக்கு கிட்டத்தட்ட வொர்க்-அவுட் ஆகியிருக்கு. அது ரொம்ப சிம்பிள். அதாவது பெண்களின் பெயர்கள் எல்லாம் உயிர்மெய் எழுத்தில் தான் பெரும்பாலும் முடியும். ஆங்கிலம்/ஜெர்மன் மாதிரி ரோமன்/லத்தீன் வழி மொழியா இருந்தா, உயிரெழுத்தில் (vowel) முடியும். ஆண்கள் பெயர்கள் பெரும்பாலும் மெய்யெழுத்தில்தான் (Consonant) முடியும். ரெண்டுக்குமே விதிவிலக்கு உண்டுன்னாலும், பெண்கள் பெயருக்கு விதிவிலக்கு மிகக் குறைச்சல்.

ஒரு சோதனை, நம்ம வலைப்பதிவர்களில் பெண்கள் யார் யார்?

அருணா, சந்திரா, சந்திரலேகா, சந்திரவதனா, மதி, நளாயினி, பவித்ரா, சுபா, உதயச்செல்வி. அட, அத்தனை பேரும் ஃபார்முலாப் படிதான் இருக்கு.

ஆண் பதிவர்களில், நிறையப் பேர் உதைக்குது. ஆனால் இந்த ரூலை எங்க அலுவலகத்தில் உள்ள வெள்ளைக்காரங்களுக்கு சோதிச்சுப் பாத்தா, ஆண்கள் பெண்கள் இருவரிலுமே 90% வெற்றி. ஒண்ணுமே தெரியாம இருக்கிறதுக்கு இது தப்பில்லைன்னு தோணுது. ஏதோ எங்க வாத்தியார் சொன்னதைப் பகிர்ந்துக்கிட்டேன். இதை நம்பி எதாவது லெட்டர் கிட்டர் போட்டு மேட்டர் வேற மாதிரியாச்சுன்னா நான் பொறுப்பில்லை, சொல்லிட்டேன், ஆமா!

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...